காயமிதுவுஞ் சதமா-அன்றியுற்பவங்
காண்பதொவ்வொரு விதமா
ஆயுமெழுபிறப்பா யவதரித்தலுண்டென்றும்
தூயபதத்தாலந்தத் துகளற்றிருப்பேனென்றும்
(ஆநந்)
வசனம்.
இவ்விதமாகப் பன்னிரண்டு
பேர்களையும் வேலைசெய்ய வொட்டாமல், தன்
சமீபத்தில் நிற்கவைத்துக்கொண்டு போதித்திருப்பதை
வேதியன் கேள்வியுற்று நந்தனாரைச்
சீறிக் கடுங்கோபஞ்செய்ய நந்தனார் வேதியருக்குச்
சொல்லுகின்றார்.
ஸ்ரீராகம்;தாளம்-ஆதி.
பல்லவி.
ஏதுக்கென்மீது
இத்தனைபேதகம்
எண்ணுவனோ தோதகம் (ஏது)
அனுபல்லவி.
காதகராம்மனக்
கசடர்சொன்ன
சொல்லை
சாதனைசெய்து சாதித்தீர்பிழையொன்
றில்லை (ஏது)
சரணங்கள்.
நான் உங்களுக்குப்
பண்டு-சாசனஞ்செய்து
நலமாய்த்தந்த
துண்டு
தோன்றலேநீசொல்லுஞ் சொற்படிச்
செய்கிறேன்
பான்மையாகநித்தம் பக்தியாய்
உய்கிறேன் (ஏது)
காசளவு
நன்மை-செய்தோரை யொரு
காலும்மறவாத் தன்மை
|