திருநாளைப்போவார்92நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தாசனுக்கெப்போது முண்டுதாமே கண்டு
யோசிக்கப்போகிறீர் இனிமேல் நான்செய்தொண்டு (ஏது)

ஏழைநான்      தானே-சூதும்வாதும்
ஏதொன்றறி     யேனே

மேழியுடனேயொரு மேதிகாளைக ளெங்கே
ஊழியனுக்கும் உழு கயிறுங்கொடுப்பீ ரிங்கே (ஏது)

____________

நந்தனார் ஏருழுதல்.

விருத்தம்.

வணக்கமாய்ச் சொல்லும் வார்த்தையை யுணர்ந்து
       வஞ்சனை யிலாத வேதியனும்
கணக்கிலாத் தனது பண்ணையாள் வசத்திற்
       கைப்பிடி யாக வொப்பித்து
பிணக்கிலா னிவன்சொற் படியெலாஞ் செய்வான்
       பின்னிடான் அழைத்துப்போ வென்ன
இணக்கமாய்க் கொண்டு போயினர் நந்தன்
       ஏர்த்தொழில் மிகப்புரிந் தன்னே.

ராகம்-சஹானா; தாளம்-மிச்ர ஏகம்.

பல்லவி.

பக்தியாயாண்டை சொற் படிசெய்தா னந்தன் பலருன்கூடி மிக

அனுபல்லவி.

கர்த்தனைசித்தங்களித்துக்    கதித்தவன்
  கமலபாதத்தை            நாடி-மெத்தக்
  காதலாகவேகொண்        டாடி
  மனம்                    நீடி (பக்தி)