வசனம்.
இவ்வகையாய்ச் சொல்லும்
நந்தனாரைப்பார்த்து வேதியர் சொல்லுகின்றார்:
விருத்தம்.
மெள்ளப்பேசிமெழுகிறாயனுதின
மூடாவுனக்கித்தனை
கள்ளக்கும்பிடிலாவதென்னபலனோ காட்டுப்பசாசல்லவோ
துள்ளித்துள்ளித்துடிக்கிறாய்சிவ பதஞ்செல்லாதுஉன்ஜாதியில்
எள்ளுக்கொல்லையில்மாடுவந்துதொடரா தேகும்படிசெல்லடா.
வசனம்.
இப்படிச்சொல்லிய
வேதியருடனே நந்தனார் தனக்குத் தெரிந்தவித்தைகளை
அத்தருணத்தில் சொல்லிக்காட்டுவார்:
முன்நந்தனார், பின் வேதியருமாகச்
சொல்லிக்கொள்ளும்
ஏட்டிக்குப்போட்டியான
இருசொல் அலங்காரம்.
நந்தனார் - தில்லையைப்பார்க்கவில்லையே
யென்றார்
வேதியர் - கொல்லையில்மிளகாயில்லையோ
வென்றார்
நந்தனார் -
கள்ளம்போனாலுள்ளதுகாணு மென்றார்
வேதியர் -
வெள்ளம்போனாலுள்ளதுவிளையு மென்றார்
நந்தனார் - திருச்சிற்றம்பலங்கண்டால்தேகங்களிக்கு
மென்றார்
வேதியர் - பொரிச்சகுழம்புகொண்டால்
தேகம்பெருக்கு மென்றார்
நந்தனார் - அரகராவென்றால்பாவம்போ
மென்றார்
வேதியர் - பறையனைக்கண்டால்
பாவமா மென்றார்
நந்தனார் - வெட்டவெளியிலேமனமுட்டிப்பாரு
மென்றார்
வேதியர் - பொட்டவெளியிலேகுழிவெட்டிப்பாரு
மென்றார்
நந்தனார் - எனக்குஊறியஞானமாரியேமதி
யென்றார்
வேதியர் - உனக்குநாறியபறைச்சேரியேகதி
யென்றார்
|