திருநாளைப்போவார்97நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நந்தனார் - அன்னீதஞ்செய்யே னென்றார்
வேதியர்
- சொன்னதுதவறாதே யென்றார்
நந்தனார்
- எங்கள்சாதிக்குஎன்னவழி யென்றார்
வேதியர்
- உங்கள்சாதிக்குஇந்தவழி யென்றார்
நந்தனார்
- உற்றதுஓது மென்றார்
வேதியர்
- பெற்றதுபோது மென்றார்
நந்தனார்
- பறையனாய்ப்பிறந்தேன்தலையெழுத்திது வென்றார்
வேதியர்
- மறையராய்ப்பிறந்தென்னவாழ்ந்திருப்பது வென்றார்
நந்தனார்
- வாய்க்காதவெனக்குவழிசொல்லுவீரே யென்றார்
வேதியர்
- காய்க்காதமரத்தில்கல்லெறியாரே யென்றார்
நந்தனார்
- எப்போதுமிப்படிச்செய்வதே னென்றார்
வேதியர்
- அப்போதுமிப்படிச்செய்ததே னென்றார்
நந்தனார்
- உலகமனைத்துங்கடவுளாய்நிறைந்ததே னென்றார்
வேதியர்
- பலகலைகற்றும்பறையனாய்ப்பிறந்ததே னென்றார்
நந்தனார்
- பழுதானசென்மம்படைத்தேனே யென்றார்
வேதியர்
- அழுதாலுங்கர்ம மடுக்காதோ வென்றார்
நந்தனார்
- காப்பதுன்பாரம்கட்டுவிடு மென்றார்
வேதியர்
- நாற்பதுவேலியைநட்டுவிடு வென்றார்
நந்தனார்
- அப்பன்கருணையிப்படியோ வென்றார்
வேதியர்
- தப்பினேனதுவுமொப்பிலே னென்றார்

வசனம்.

நந்தனார் மெத்தவும் ஐயரை வணங்கி உத்தாரங்கேட்கின்றார்.

விருத்தம்.

அல்லெனுங் குழலாள்மோக மண்டாது வொருகாற் றொண்டர்
பல்லூழி காலஞ்செய்த பழவினைத் தொடக் கறுத்துச்
சொல்லினு மடங்கொணாத சுகக்கட லாட்டி வைக்குந்
தில்லைநா யகனைக்கண்டு தெரிசனஞ் செய்வே னென்றார்.