வசனம்.
இப்படிச் சிதம்பரம்போக
உத்தாரங்கேட்ட நந்தனாருடைய சிவபத்தி பரிதாபத்தை
ஆதிசேடனாலுஞ்
சொல்ல வொண்ணாத மகிமையைக்கொண்ட மகானுபாவனை,
அடிமைக்காரனென்று வேணபடி பேசுவார்.
ராகம்-முகாரி; தாளம்-ஆதி.
கண்ணிகள்.
மாடுதின்னும்புலையாவுனக்கு
மார்கழித்திருநாளோ
தேடிக்கும்பிடும்யாரிடத்தேபோய்த் தீண்டாதேபோடா
ஆடுதின்னும்புலையாவுனக்கு ஆனித்தெரிசனமோ
நாடுசிரிக்கும்வார்த்தைகளன்றோ நாடாதேபோடா
நண்டுக்குக்கலியாணம்மூளை நரிக்குச்சங்கராந்தி
பண்டிகைபூசைதிருநாளுண்டோ பறையாநீபோடா
பூசைகள்செய்வாயோஆண்டவன் பொன்னடிதொழுவாயோ
கூசல்போடாதேபோடாயிங்கே கூழைக்கும்பி டிடாதே
கங்கையிலாடுவையோ அங்கே காணிக்கைபோடுவையோ
இங்கிதமறிவேனடிக்கடிவந்து யிரையாதேபோடா
அஞ்செழுத்தோதுவையோவுனக்கு மானந்தத்திருக்கூத்தோ
வஞ்சகவார்த்தைநாளைத்தெரியும் வாராதேபோடா.
____________
வசனம்.
அடா! நந்தா! சபாஷ்
நன்றாயிக்கின்றது. நீ சிதம்பரம் போகவேண்டுமென்று
கேட்பதை ஆலோசித்தால் மிகுந்த ஆச்சரியமாயிக்கின்றதென்று
வேதியர் பின்னுஞ்
சொல்லுகின்றார்;
|