முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
81 முதல் 90 வரை
|
|
81. வளவ னாயினு மளவறிந்
தழித்துண் |
(பதவுரை)
வளவன் ஆயினும் - (செல்வத்தில் நீ) சோழனுக்கு ஒப்பானவன்
ஆனாலும், அளவு - (பொருள் வரவின்) அளவை,
அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து,
உண் - அனுபவி.
(பொழிப்புரை)
நீ சோழன்போன்ற செல்வ முடையவன் ஆனாலும் வரவுக்குத் தக்கபடி செலவுசெய்து
உண்ணு. |
|
|
|
|
82 வானஞ் சுருங்கிற் றானஞ்
சுருங்கும் |
(பதவுரை)
வானம் - மழையானது, சுருங்கின் - குறையுமாயின்,
தானம் - தருமமானது, சுருங்கும் -
குறைவுபடும்.
(பொழிப்புரை)
மழை பெய்வது குறைந்தால் தானஞ்செய்வது
குறையும். |
|
|
|
|
83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய
வொழுக்கம் |
(பதவுரை)
விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு,
பொருந்திய - தகுதியான, ஒழுக்கம் - இல்லற
வொழுக்கம், இல்லை - இல்லையாம்.
(பொழிப்புரை)
விருந்தினரை உபசரியாதவர்களுக்குத் தகுதியான இல்லற வொழுக்கம்
இல்லையாம். |
|
|
|
|
84. வீரன் கேண்மை கூரம்
பாகும் |
(பதவுரை)
வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம்,
கூர் அம்பு ஆகும் - கூர்மைபொருந்திய அம்பை ஒப்பாகும்.
(பொழிப்புரை)
ஒருவனுக்கு வீரனுடைய நட்பு இருந்தால் அஃது அவனுக்குக் கூரிய அம்புபோல் பகையை வெல்ல
உதவும். |
|
|
|
|
85. உரவோ ரென்கை யிரவா
திருத்தல் |
(பதவுரை)
உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப்படுதல்,
இரவாது - யாசியாமல், இருத்தல் -
இருக்கையாம்.
(பொழிப்புரை)
திட்பமுடையோர் என்று சொல்லப்படுவது சிறுமைவந்த காலத்திலும் பிறரை
இரவாதிருப்பதாம். |
|
|
|
|
86. ஊக்க முடைமை யாக்கத்திற்
கழகு |
(பதவுரை)
ஊக்கம் - மனந்தளராமையை, உடைமை -
உடைத்தாதல்; ஆக்கத்திற்கு - செல்வத்திற்கு,
அழகு - அழகாகும்.
(பொழிப்புரை)
செய்யுந் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு
அழகாகும். |
|
|
|
|
87. வெள்ளைக் கில்லை கள்ளச்
சிந்தை |
(பதவுரை)
வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து,
கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை -
நினைப்பானது, இல்லை - இல்லை.
(பொழிப்புரை)
களங்கமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சக
நினைப்பில்லை. |
|
|
|
|
88. வேந்தன் சீறி னாந்துணை
யில்லை |
(பதவுரை)
வேந்தன் - அரசனானவன், சீறின் - (ஒருவனைக்)
கோபித்தால், ஆம் - (அப்போது அவனுக்கு) ஆகின்ற,
துணை - உதவி, இல்லை -
இல்லையாம்.
(பொழிப்புரை)
அரசன் ஒருவனைக் கோபித்தால் அவனுக்கு வேறு
உதவியில்லை. |
|
|
|
|
89. வையந் தோறுந் தெய்வந்
தொழு |
(பதவுரை)
வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்),
தெய்வம் - கடவுளை, தொழு -
வணங்கு.
(பொழிப்புரை)
பூமியிலுள்ள தெய்வத்தலந்தோறுஞ் சென்று கடவுளை
வணங்கு. |
|
|
|
|
90. ஒத்த விடத்து நித்திரை
கொள் |
(பதவுரை)
ஒத்தவிடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் -
நித்திரைபண்ணு.
(பொழிப்புரை)
சமமான இடத்திலே படுத்து
நித்திரைசெய். |
|
|
|
|
91. ஓதாதார்க் கில்லை யுணர்வொடு
மொழுக்கம் |
(பதவுரை)
ஓதாதார்க்கு - படியாதவர்க்கு, உணர்வொடும் -
அறிவுடனே, ஒழுக்கம் - நல்லநடையும், இல்லை -
(உண்டாதல்) இல்லை.
(பொழிப்புரை)
நல்லநூல்களைப் பயிலாதவர்க்கு அறிவும் நன்னடையும் இல்லை.
கொன்றைவேந்தன் மூலமும் உரையும்
முற்றிற்று |
|
|
|
|