| முன் பக்கம் | முகப்பு | தேடுதல் | 
		
				| 1 முதல் 10 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) 
      துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி 
      - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் 
      உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை, 
      பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் 
      எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், 
      சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு 
      உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் 
      - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய 
      செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - 
      அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, 
      நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.
      விநாயகக் கடவுளின் திருவடிகளைப் 
      பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் 
உண்டாகும்.
        வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 
        மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
 துப்பார் திருமேனித் 
        தும்பிக்கை யான்பாதம்
 தப்பாமற் சார்வார் 
      தமக்கு.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) நின்று - நிலைபெற்று, 
      தளரா - சோராமல், வளர் - வளர்கின்ற, 
      தெங்கு - தென்னையானது, தாள் உண்ட நீரை - தன் 
      அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே - தன் முடியாலே, தான் 
      தருதலால் - (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், 
      ஒருவற்கு -(நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி 
      செய்தக்கால் - உதவி செய்தால், அந்நன்றி - 
      அவ்வுதவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது செய்வானோ, 
      என வேண்டா - என்று ஐயுற வேண்டுவதில்லை.
      நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் 
      சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். 
  (1)
        1  நன்றி ஒருவற்குச் 
        செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ 
        லெனவேண்டா-நின்று
 தளரா வளர்தெங்கு தாளுண்ட 
        நீரைத்
 தலையாலே தான்தருத 
      லால்.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) நல்லார் ஒருவர்க்கு - 
      நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம் - செய்த உதவியானது, 
      கல்மேல் எழுத்துப்போல் - கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட 
      எழுத்தைப் போல, காணும் - அழியாது விளங்கும்; அல்லாத 
      - நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு - 
      அன்பில்லாத மனமுடையார்க்கு, ஈந்த உபகாரம் - செய்த உதவியானது, 
      நீர்மேல் எழுத்திற்கு - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, 
      நேர் - ஒப்பாக (அழிந்துவிடும்).
        2  நல்லா 
        ரொருவர்க்குச் செய்த உபகாரம்கல்மே லெழுத்துப்போற் 
        காணுமே-அல்லாத
 ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த 
        உபகாரம்
 நீர்மே லெழுத்திற்கு 
      நேர்.
 
 நல்லவருக்குச் செய்த 
      உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த 
      அப்பொழுதே அழிந்துவிடும் எ - ம்
(2)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) இளமை - (இன்பத்தைத் 
      தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் - வறுமை 
      வந்து அடைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவதாகும், 
      இன்னா அளவில் - துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், 
      இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத 
      - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள் (சூடுதற்குரிய) காலமல்லாத 
      காலத்தில், பூத்த நல்மலரும் - மலர்ந்த நல்ல மலரையும், 
      ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத 
      மங்கையின் அழகையும், போலும் - ஒக்கும்.
      ஏ: அசை. அழகும் என்பதில் உம்மை 
      தொக்கது.வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் 
      விளைவிப்பன எ - ம். (3)
        3.  இன்னா இளமை 
        வறுமைவந் தெய்தியக்கால்இன்னா அளவி 
        லினியவும்-இன்னாத
 நாளல்லா நாட்பூத்த நன்மலரும் 
        போலுமே
 ஆளில்லா மங்கைக் 
      கழகு.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) பால் - பாலினை, 
      அட்டாலும் - காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது 
      - அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு - சங்கினை, 
      சுட்டாலும் - சுட்டு நீறாக்கினாலும், வெண்மை 
      தரும் - அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் 
      மக்கள் - மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும், 
      மேன் மக்களே - மேலோராகவே விளங்குவர்; நண்பு 
      அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் 
      நட்டாலும் - கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர் - 
      நண்பராகார்.
      பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு 
      உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது 
      உவமைகளாற் புலனாகின்றது. ஏ: தேற்றப் பொருட்டு.
      மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் 
      கலந்து பழகினாலும் நண்பராகார் எ - ம். 
(4)
        4.  அட்டாலும் 
        பால்சுவையிற் குன்றா தளவளாய்நட்டாலும் நண்பல்லார் 
        நண்பல்லர்
 கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க 
        ளேசங்கு
 சுட்டாலும் வெண்மை 
      தரும்.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) தொடுத்த - கிளைத்த, 
      உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் 
      எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி 
      - பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா - பழுக்கமாட்டவாம்; 
      (அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், 
      ஆகுநாள் அன்றி - முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த 
      கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள்; ஆகா - 
      முடியாவாம்.
      எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் 
      முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். 
  (5)
        5.  அடுத்து முயன்றாலு 
        மாகுநா ளன்றிஎடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
 உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
 பருவத்தா லன்றிப் 
        பழா.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) கல் தூண் - கருங்கற் 
      கம்பமானது, பெரும்பாரம் தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமந்தால், 
      பிளந்து இறுவது அல்லால் - பிளந்து முறிவதல்லாமல், தான் 
      தளர்ந்து வளையுமோ - தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அது போல), 
      உற்ற இடத்தில் - மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் 
      வழங்கும் தன்மையோர் - தம் உயிரைவிடும் குணமுடையோர், 
      பற்றலரை - பகைவரை, கண்டால் - பார்த்தால், 
      பணிவரோ - வணங்குவரோ? (வணங்கார்).ஓ இரண்டும் 
      எதிர்மறை.
      மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் 
      விடுவரேயன்றி மானத்தை விடார் எ - ம். 
(6)
        6  உற்ற இடத்தில் 
        உயிர்வழங்குந் தன்மையோர்பற்றலரைக் கண்டாற் 
        பணிவரோ-கற்றூண்
 பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் 
        தாங்கின்
 தளர்ந்து வளையுமோ 
        தான்.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) நீர் ஆம்பல் - 
      நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும் - நீரினது உயரத்தின் 
      அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு - கூரிய அறிவானது, 
      தான் கற்ற - தான் படித்த, நூல் அளவே ஆகும் - 
      நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் - தான் 
      அடைந்த செல்வமானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து 
      அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் - 
      குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே 
      இருக்கும்.
      ஆம் மூன்றும் அசை நிலை.
      ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் 
      தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும் இருக்கும் எ - ம். 
  (7)
        7  நீரளவே யாகுமாம் 
        நீராம்பல் தான்கற்றநூலளவே யாகுமாம் 
        நுண்ணறிவு-மேலைத்
 தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற 
        செல்வம்
 குலத்தளவே யாகுங் 
        குணம்.
 
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) நல்லாரை - 
      நற்குணமுடையோரை, காண்பதுவும் - பார்ப்பதும், 
      நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய, 
      நலம் மிக்க - பயன் நிறைந்த, சொல் - 
      சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், நன்றே - 
      நல்லதே; நல்லார் - நல்லவருடைய, குணங்கள் - 
      நற்குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், நன்றே 
      - நல்லதே, அவரோடு - அந் நல்லவருடன், இணங்கி 
      இருப்பதுவும் - கூடியிருத்தலும், நன்று - 
      நல்லதே.
      ஏ மூன்றும் தேற்றம்.
      நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் 
      கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் 
      நல்லொழுக்கமும் உண்டாகும் எ - ம். 
(8)
        8.  நல்லாரைக் 
        காண்பதுவும் நன்றே நலமிக்கநல்லார்சொற் கேட்பதுவும் 
        நன்றேஎ-நல்லார்
 குணங்க ளுரைப்பதுவும் நன்றே 
        அவரோ
 டிணங்கி யிருப்பதுவும் 
        நன்று.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) தீயாரை - தீக்குணம் 
      உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே - 
      தீயதே; தீயார் - தீயவருடைய, திருஅற்ற - பயன் 
      இல்லாத, சொல் - சொல்லை, கேட்பதுவும் - 
      கேட்டலும், தீதே - தீயதே; தீயார் - 
      தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, 
      உரைப்பதுவும் - பேசுதலும், தீதே - தீயதே; 
      அவரோடு - அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும் 
      - கூடியிருத்தலும், தீதே - தீயதே.
      ஏ மூன்றும் தேற்றம்.
      தீயாரைக் காணினும், அவர் 
      சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் 
      தீயொழுக்கமும் உண்டாகும் எ - ம். 
(9)
        9.  தீயாரைக் 
        காண்பதுவுந் தீதே திருவற்றதீயார்சொற் கேட்பதுவுந் 
        தீதேஎ-தீயார்
 குணங்க ளுரைப்பதுவுந் தீதே 
        அவரோ
 டிணங்கி யிருப்பதுவுந் 
      தீது.
 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 
      நல்லாரால் எல்லார்க்கும் 
  நலம் |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் - 
      இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் 
      வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்திலுள்ள புல்லுக்கும் 
      பொசியும் - புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் 
      உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் 
      உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பாராயின், அவர் பொருட்டு 
      - அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - 
      அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.ஏ, ஆம் இரண்டும் 
      அசை.நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10)
        10.  நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் 
        வழியோடிப்புல்லுக்கு மாங்கே 
        பொசியுமாம்-தொல்லுலகில்
 நல்லா ரொருவர் உளரேல் 
        அவர்பொருட்
 டெல்லார்க்கும் பெய்யு 
        மழை.
 
 |  | 
		
			|  |  |  |