முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
11 முதல் 20 வரை
|
|
-
11. பண்டு முளைப்ப
தரிசியே யானாலும்
விண்டுமி போனால்
முளையாதாம்-கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகா
தளவின்றி ஏற்ற கருமஞ்
செயல்.
(பதவுரை) பண்டு முளைப்பது - (உமி
நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும் - அரிசியே
யாயினும், உமி விண்டு போனால் - உமி நீங்கிப்போனால்,
முளையாது - (அவ்வரிசி) முளையாது; (அதுபோல)
கொண்ட - பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும்
- பெரிய வல்லமையை உடையவர்க்கும், அளவு இன்றி - துணைவலி
யில்லாமல், ஏற்ற கருமம் - எடுத்துக்கொண்ட செயலை,
செயல் ஆகாது - செய்து முடித்தல் இயலாது.
மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச்
செய்து முடிக்கத் துணைவலி வேண்டும் எ - ம். (11) |
|
|
|
|
-
12. மடல்பெரிது தாழை மகிழினிது
கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க
வேண்டா-கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே
சிற்றூறல் உண்ணீரு மாகி
விடும்.
- (பதவுரை) 1தாழை மடல்
பெரிது - தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ்
கந்தம் இனிது - மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே
(தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது - சமுத்திரம்
பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது - ஆயினும் அதிலுள்ள நீர்
(உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு
சிற்றூறல் - அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர்,
உண் நீரும் ஆகும் - குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்)
உடல் சிறியர் என்று இருக்கவேண்டா - (ஒருவரை) உருவத்தினாலே
சிறியவரென்று (மதியாமல்) இருக்கவேண்டா.
-
- மண்ணுதல் - கழுவுதல், ஏ:
அசை.
உருவத்தாற்
பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற்
பெரியவராதலும் உண்டு; எ - ம். (12)
---------------------------------------------------------------------------
1தாழை என்பது
தென்னையையும் குறிக்கும். தென்னை மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும்
மணமில்லை.
|
|
|
|
|
-
13. கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல
மரங்கள்-சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பறிய மாட்டா தவன்நல்
மரம்.
- (பதவுரை) கவை ஆகி - கிளைகளை உடையனவாகியும்,
கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து
நிற்கும் - காட்டினுள்ளே நிற்கின்ற, அவை - அந்த
மரங்கள், நல்ல மரங்கள் அல்ல - நல்ல மரங்கள் ஆகா;
சவை நடுவே - கற்றோர் சபையின் நடுவே, நீட்டு
ஓலை - (ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான் -
படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறியமாட்டாதவன் - பிறர்
குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்மரம் - நல்ல
மரங்களாம்.
-
ஏ இரண்டும் அசை.
- கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய
மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்; எ - ம். (13)
|
|
|
|
|
-
14. கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப்
பாவித்துத்-தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற்
போலுமே கல்லாதான் கற்ற
கவி.
- (பதவுரை) கல்லாதான் - கற்கவேண்டியவற்றை (முறைப்படக்)
கல்லாதவன், கற்ற கவி - (கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு
கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட -
காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான்
கோழி - அதைப் பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானது, தானும்
அதுவாகப் பாவித்து - தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டு,
தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் - தானும்
தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும்.
-
ஏ: அசை.
கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான் எ - ம்.
(14) |
|
|
|
|
தீயோர்க்கு உதவுதல் கேடு
தரும் |
-
15. வேங்கை
வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார
மானாற்போல்-பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த
உபகாரங் கல்லின்மே லிட்ட
கலம்.
- (பதவுரை) வேங்கை வரிப்புலிநோய்-வரிகளையுடைய வேங்கைப்
புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய,
விடகாரி-விட வைத்தியன், ஆங்கு -
அப்பொழுதே, அதனுக்கு - அப்புலிக்கு, ஆகாரம்
ஆனால்போல் - இரையானாற்போல, பாங்கு அறியா -
நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு - அற்ப அறிவினருக்கு,
செய்த உபகாரம் - செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல்
இட்ட கலம்-கல்லின்மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து,
செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.)
-
- தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே
உண்டாகும்.
-
- விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை
அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே
தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும் எ - ம்.
(15)
|
|
|
|
|
-
16. அடக்க முடையா
ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும்
வேண்டா-மடைத்தலையில் ஓடுமீ னோட உறுமீன்
வருமளவும் வாடி யிருக்குமாங்
கொக்கு.
(பதவுரை) கொக்கு - கொக்கானது,
மடைத்தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன்
ஓட - ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, உறு மீன் -
(இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும் - வரும் வரையும்,
வாடி இருக்கும் - அடங்கியிருக்கும்; (அதுபோல) அடக்கம்
உடையார் - தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை, அறிவு
இலர் என்று எண்ணி - அறிவில்லாதவரென்று கருதி, கடக்க -
அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா - நினைக்கவும்
வேண்டுவதில்லை.
அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை
வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் எ - ம்.
(16) |
|
|
|
|
-
17. அற்ற குளத்தின்
அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார்
உறவல்லர்-அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும்
போலவே ஒட்டி யுறுவார்
உறவு.
(பதவுரை) அற்ற குளத்தின் - நீர்வற்றிய
குளத்தினின்றும், அறு - நீங்குகின்ற,
நீர்ப்பறவைபோல் - நீர்வாழ் பறவைகள்போல,
உற்றுழி - வறுமை வந்தபொழுது, தீர்வார் -
நீங்குவோர், உறவு அல்லர் - உறவினராகார்;
அக்குளத்தில் - அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும்
ஆம்பலும் நெய்தலும் போல - கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல,
ஒட்டி உறுவார் - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை
அனுபவிப்போரே, உறவு - உறவினராவர்.
போலவே என்பதிலுள்ள ஏகாரத்தை உறுவார்
என்பதனுடன் சேர்க்க.
வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம்
அனுபவிப்போரே உறவினராவர் எ - ம்.
(17) |
|
|
|
|
தாழ்ந்தாலும் மேன்மக்களே
சிறந்தவர் |
-
18. சீரியர்
கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங்
கென்னாகும்-சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு
மென்னா மண்ணின் குடமுடைந்தக்
கால்
(பதவுரை) சீரியர் கெட்டாலும்-மேன்மக்கள்
வறுமையுற்றாலும், சீரியரே - மேன்மைக் குணமுடையோரே யாவர்;
சீரியர் அல்லாதார் கெட்டால்-கீழ்மக்கள் வறுமையுற்றால்,
அங்கு என் ஆகும் - அப்பொழுது அவரின் குணம் யாதாகும்,
சீரிய பொன்னின் குடம் உடைந்தால் - சிறந்த பொன்னாலாகிய குடம்
உடைந்தாலும், பொன் ஆகும் - பழைய பொன்னேயாகிப் பயன் தரும்;
மண்ணின் குடம் உடைந்தக்கால் -மண்ணாலாகிய குடம் உடைந்தால்,
என் ஆகும் - அது யாது பயனுடையதாம். மற்று: அசை.
மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்;
கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராவர் எ -
ம்.(18) |
|
|
|
|
-
19. ஆழ அமுக்கி
முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது
நால்நாழி-தோழி நிதியுங் கணவனும் நேர்படினும்
தந்தம் விதியின் பயனே
பயன்.
(பதவுரை) ஆழ் கடல் நீர் - ஆழமாகிய கடலின் நீரை,
ஆழ அமுக்கி முகக்கினும் - அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும்,
நாழி-ஒரு படியானது, நால் நாழி முகவாது -
நான்குபடி நீரை மொள்ளாது; (அதுபோல), தோழி - தோழியே,
நிதியும் கணவனும் நேர்படினும் - (பெண்டிர்க்கு) மிக்க பொருளும்
தக்க நாயகனும் கிடைத்தாலும், தம்தம் - அவரவருடைய,
விதியின் பயனே பயன் - ஊழினளவாகிய பயனே (அனுபவிக்கப்படும்)
பயனாகும்.
தோழி: மகடூஉ முன்னிலை.
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும்,
பழ வினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது எ - ம்.
(19) |
|
|
|
|
-
20. உடன்பிறந்தார்
சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும்
வியாதி - உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே
பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு
முண்டு.
(பதவுரை) வியாதி - நோயானது, உடன்பிறந்தே
கொல்லும் - உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்)
உடன் பிறந்தார் - உடன் பிறந்தவர் எல்லோரும்,
சுற்றத்தார் என்று இருக்க வேண்டா - (நன்மை செய்யும்)
சுற்றத்தாரென்று கருதியிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா - உடன்
பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே - பெரிய மலையில் இருக்கிற
மருந்தே, பிணி தீர்க்கும் - நோயைப் போக்கும்;
அம்மருந்து போல்வாரும் உண்டு - அம் மருந்து போல்
(அயலாராயிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு.
உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும்
அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு எ - ம்.
(20) |
|
|
|
|