| 1 முதல் 10 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, 
      துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை 
      முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் 
      கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் 
      தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் 
      கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - 
      அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - 
      சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - 
      தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.
      இதன் கருத்து :- 
      விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் 
      தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
        பாலுந் தெளிதேனும் பாகும் 
        பருப்புமிவைநாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
 துங்கக் கரிமுகத்துத் 
        தூமணியே நீயெனக்குச்
 சங்கத் தமிழ்மூன்றுந் தா.
 இசை, நாடகம் என்னும் 
      பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் 
      பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் 
பெறுவதாயிற்று.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) புண்ணியம் ஆம் - 
      அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது 
      அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த 
      அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே 
      பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே 
      இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - 
      ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த 
      மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி 
      வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது 
      புண்ணியமே செய்க.
      புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் 
      துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் 
      போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. 
(1)
        1.  புண்ணியம்ஆம் 
        பாவம்போம் போனநாட் செய்தஅவைமண்ணில் பிறந்தார்க்கு 
        வைத்தபொருள்-எண்ணுங்கால்
 ஈதொழிய வேறில்லை எச்சமயத் 
        தோர்சொல்லுந்
 தீதொழிய நன்மை 
        செயல்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) சாற்றுங்கால் - 
      சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு 
      ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் 
      யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, 
      முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் 
      முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; 
      இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - 
      இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள 
      இயற்கை இதுவேயாம்.
      கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் 
      இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ - ம். 
  (2)
        2.  சாதி யிரண்டொழிய 
        வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா 
        நெறிமுறையின்-மேதினியில்
 இட்டார் பெரியோர் இடாதார் 
        இழிகுலத்தோர்
 பட்டாங்கில் உள்ள 
        படி.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) இயல் உடம்பு இது - 
      பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, 
      இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் 
      பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் 
      என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - 
      விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், 
      உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், 
      பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், 
      விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - 
      விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - 
      முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.
      அறஞ் செய்தவர்க்கு முறையாலே 
      வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் 
      எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது 
      செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் 
      என்க. (3)
        3.  இடும்பைக்கு இடும்பை 
        இயலுடம்பி தன்றேஇடும்பொய்யை மெய்யென் 
        றிராதே-இடுங்கடுக
 உண்டாயி னுண்டாகும் ஊழிற் 
        பெருவலிநோய்
 விண்டாரைக் கொண்டாடும் 
        வீடு.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) யார்க்கும் - 
      எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - 
      (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், ஒரு கருமம்-ஒரு 
      -காரியத்தை, எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது 
      - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் 
      இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை 
      விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த 
      மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் 
      பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் 
      முடியும்.
      புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய 
      காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ-ம். மாத்திரை-அளவு. குருடன் 
      மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. 
(4)
        4.  எண்ணி ஒருகருமம் 
        யார்க்குஞ்செய் யொண்ணாதுபுண்ணியம் வந்தெய்து 
        போதல்லாற்-கண்ணில்லான்
 மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ 
        லொக்குமே
 ஆங்கால மாகு மவர்க்கு.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) வாராத-(ஊழால்) 
      வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், 
      வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்) 
      வரக்கூடியவை, போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும், 
      போகா-போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை 
      யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் 
      புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் 
      நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, 
      மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.
      இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் 
      தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் 
      கவலையுறுதல் தக்க
        5.   வருந்தி அழைத்தாலும் வாராத 
        வாராபொருந்துவன போமினென்றாற் 
        போகா-இருந்தேங்கி
 நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் 
        தாம்நினைந்து
 துஞ்சுவதே மாந்தர் 
        தொழில்.
 தன்று எ - ம். (5)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) ஒருவர்க்கு - ஒருவருக்கு, 
      உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் 
      சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள,-அநுபவிக்க 
      விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) 
      குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் 
      உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் 
      ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு 
      கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - 
      அதனாற் பயன் என்ன?
      கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் 
      ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது
        6.  உள்ள தொழிய ஒருவர்க் 
        கொருவர்சுகங்கொள்ளக் கிடையா 
        குவலயத்தில்-வெள்ளக்
 கடலோடி மீண்டு கரையேறி 
        னாலென்
 உடலோடு வாழும் உயிர்க்கு
 எ - ம். (6)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) எல்லாப் படியாலும் - 
      எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, 
      இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் 
      புழு-பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய்-நிறைந்த 
      பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; 
      நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் 
      - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால்-ஆகையால் 
      (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, 
      பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; 
      பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் 
      பேசமாட்டார்கள், ஆம்: அசை.
      உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு 
      கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள் எ - ம். 
(7)
        7.  எல்லாப் படியாலும் 
        எண்ணினால் இவ்வுடம்புபொல்லாப் புழுமலிநோய்ப் 
        புன்குரம்பை-நல்லார்
 அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல 
        நீர்போற்
 பிறிந்திருப்பார் பேசார் 
        பிறர்க்கு
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) 
      மகிதலத்தீர்-பூமியிலுள்ள மனிதர்களே, 
      கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள் - 
      தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த 
      ஆயினும்-முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் 
      கூடாவாம் - ஊழ் கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் 
      தரியாது-ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் 
      மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்: அசை. 
      
      காணுமிரண்டும் முன்னிலை யசை. 
    (8)
        8.   ஈட்டும் பொருண்முயற்சி 
        எண்ணிறந்த வாயினும் ஊழ்கூட்டும் படியன்றிக் 
        கூடாவாம்-தேட்டம்
 மரியாதை காணு மகிதலத்தீர் 
        கேண்மின்
 தரியாது காணுந் 
      தனம்
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | குடிப்பிறந்தார் இல்லை 
  எனமாட்டார் |  
 
  
  
    | 
        (பதவுரை) ஆற்றுப் பெருக்கு அற்று 
      - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்-(மணலானது 
      வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் 
      ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் 
      பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல) 
      நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், 
      நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், 
      ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, 
      இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது 
      கொடுப்பர்).
      உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் 
      காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார்  எ -ம். 
  (9)
        9.  ஆற்றுப் பெருக்கற் 
        றடிசுடுமந் நாளுமவ்வாறுஊற்றுப் பெருக்கால் 
        உலகூட்டும்-ஏற்றவர்க்கு
 நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் 
        ஆனாலும்
 இல்லையென மாட்டார் 
      இசைந்து
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) மா நிலத்தீர்-பெரிய 
      பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - 
      வருடா வருடந் தோறும் அழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ - 
      இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) 
      அழ வேண்டுவதில்லை; நமக்கும் அதுவழியே - நமக்கும் அம்மரணமே 
      வழியாகும்; நாம் போம் அளவும்-நாம் இறந்துபோ மளவும், 
      எமக்கு என் என்று-எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு 
      இரும்-பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.
      இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் 
      பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க எ - ம். 
  (10)
        10.   ஆண்டாண்டு தோறும் அழுது 
        புரண்டாலும்மாண்டார் வருவரோ 
        மாநிலத்தீர்-வேண்டா
 நமக்கும் அதுவழியே நாம்போம் 
        அளவும்
 எமக்கென்னென் றிட்டுண் 
        டிரும்.
 |  | 
		
			|  |  |  |