| 11 முதல் 20 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) இடும்பைகூர் என் 
      வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி 
      என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் 
      விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) 
      இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ 
      அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; 
      உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் 
      எனக்கு அருமையாக இருக்கின்றது.
      வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் 
      பிறிதில்லை எ - ம். (11)
        11.   ஒருநாள் உணவை ஒழியென்றால் 
        ஒழியாய்இருநாளுக்கு ஏலென்றால் 
        ஏலாய்-ஒருநாளும்
 என்னோ வறியாய் இடும்பைகூர் 
        என்வயிறே
 உன்னோடு வாழ்தல் 
        அரிது.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) ஆற்றங்கரையின் 
      மரமும்-ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த 
      வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், 
      விழும் அன்றே-அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது 
      உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; 
      அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; 
      வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், 
      பழுது உண்டு - தவறு உண்டு.
      அம் : சாரியை. கண்டீர் : முன்னிலை 
      அசை.
      உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர 
      முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ - ம். 
      (12)
        12.  ஆற்றங் கரையின் 
        மரமும் அரசறியவீற்றிருந்த வாழ்வும் 
        விழுமன்றே-ஏற்றம்
 உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை 
        கண்டீர்
 பழுதுண்டு வேறோர் 
        பணிக்கு
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) அம் புவியதன்மேல் - 
      அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை 
      அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? 
      அது அன்றி - அது வல்லாமல், சாவாரை தவிர்ப்பவர் 
      யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? 
      ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - 
      பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் 
      யாவர்? ஏ மூன்றும் அசை.
      ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் 
      கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ - ம். 
  (13)
        13.  ஆவாரை யாரே 
        அழிப்பர் அதுவன்றிச்சாவாரை யாரே 
        தவிர்ப்பவர்-ஓவாமல்
 ஐயம் புகுவாரை யாரே 
        விலக்குவார்
 மெய்யம் புவியதன் 
        மேல்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) 
      பேசுங்கால்-சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த 
      குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய 
      குடிவாழ்க்கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய 
      இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; 
      சிச்சீ-சீ சீ (இது என்ன செய்கை), வயிறு 
      வளர்க்கைக்கு-இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் 
      அழியாது - மானங் கெடாமல் உயிர் விடுகை - உயிரை 
      விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.
      பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு 
      மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ - 
      ம். (14)
        14.  பிச்சைக்கு மூத்த குடி 
        வாழ்க்கை பேசுங்கால்இச்சைபல சொல்லி 
        இடித்துண்கை-சிச்சீ
 வயிறு வளர்க்கைக்கு மானம் 
        அழியாது
 உயிர்விடுகை சால 
      உறும்
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | திருவைந்தெழுந்தின் 
சிறப்பு |  
 
  
  
    | 
        (பதவுரை) சிவாயநம என்று சிந்தித்து 
      இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, 
      ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம்
        15.  சிவாய நமவென்று 
        சிந்தித் திருப்போர்க்குஅபாயம் ஒருநாளும் 
        இல்லை-உபாயம்
 இதுவே மதியாகும் அல்லாத 
        வெல்லாம்
 விதியே மதியாய் 
        விடும்
 உண்டாகாது; 
      இதுவே-இஃதொன்றுமே, உபாயம்-(விதியைவெல்லுதற் 
      கேற்ற) உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், 
      விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.
      சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது 
      நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ - ம். 
      (15)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) தண்ணீர் நில 
      நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் 
      குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை 
      மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் 
      நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத 
      வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த 
      பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், 
      என்று அறி - என்று நீ அறிவாயாக.
      நில நன்மையினாலே தண்ணீருக்கும், 
      கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை 
      உண்டாகும் எ - ம். (16)
        16.  தண்ணீர் 
        நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்கண்ணீர்மை 
        மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
 கற்பழியா ஆற்றால் 
        கடல்சூழ்ந்த வையகத்துள்
 அற்புதமாம் என்றே 
        அறி
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | தீவினையே வறுமைக்கு 
வித்து |  
 
  
  
    | 
        (பதவுரை) வையத்துப் பாவம் அறும் என்ன 
      அறிந்து - பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, 
      அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் 
      தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, 
      இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், 
      இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? 
      (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே 
      வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.)
      வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய 
      தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ-ம். 
      (17)
        17.   செய்தீ வினையிருக்கத் 
        தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ 
        இருநிதியம்-வையத்து
 அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் 
        கின்று
 வெறும்பானை பொங்குமோ 
        மேல்
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) பேர் உலகில் - பெரிய 
      நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், 
      பிறந்தார் - (எமக்குப்) 
      பிறந்தவர்,பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், 
      உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் 
      - (எம்மை). நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய 
      உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் 
      கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - 
      (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - 
      (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ 
      தாம் இரண்டும் அசை.
      உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் 
      கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார் எ - 
      ம். (18)
        18.   பெற்றார் பிறந்தார் 
        பெருநாட்டார் பேருலகில்உற்றார் உகந்தார் 
        எனவேண்டார்-மற்றோர்
 இரணங் கொடுத்தால் இடுவர் 
        இடாரே
 சரணங் கொடுத்தாலுந் 
        தாம்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) வயிற்றின் 
      கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, 
      சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று 
      இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் 
      கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், 
      பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் 
      ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - 
      (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், 
      உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - 
      நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, 
      போவிப்பம் - செலுத்துகின்றேம்.
      வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு 
      அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் எ - 
      ம். (19)
        19.  சேவித்துஞ் 
        சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்பாவித்தும் 
        பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
 பாழின் 
        உடம்பை வயிற்றின் கொடுமையால்
 நாழி அரிசிக்கே 
        நாம்
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | பரத்தையரால் செல்வம் 
  பாழாம் |  
 
  
  
    | 
        (பதவுரை) கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை     (இன்பங்காரணமாகக்) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக்கல்லே துணையாக, ஆறு   இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப்போலும்; (அன்றியும்)  மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் -  வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.
      விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய  இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழிபாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில்    துன்புறுவன் எ - ம். (20)
        20.   அம்மி துணையாக ஆறிழிந்த 
        ஆறொக்குங்கொம்மை முலைபகர்வார்க் 
        கொண்டாட்டம்-இம்மை
 மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் 
        போக்கி
 வெறுமைக்கு வித்தாய் 
        விடும்.
 |  | 
		
			|  |  |  |