21 முதல் 30 வரை
|
|
வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும்
நலன் |
-
21 நீரு நிழலு
நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும்
பெருவாழ்வும்-ஊரும் வருந்திருவும் வாழ்நாளும்
வஞ்சமில்லார்க்கு என்றுந் தருஞ்சிவந்த தாமரையாள்
தான்
(பதவுரை) சிவந்த தாமரையாள் -
செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு -
வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும்,
நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும்
நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும்,
பேரும் - பேரையும், புகழும் -
கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும்,
ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் -
வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும்,
என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.
வஞ்சனை
யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும்
உண்டாகும் எ - ம். (21) |
|
|
|
|
-
22. பாடுபட்டுத் தேடிப்
பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே
கேளுங்கள்-கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யாரே
யநுபவிப்பார் பாவிகள் அந்தப்
பணம்.
(பதவுரை) பணத்தைப்
பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து
வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து,
கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே,
கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு
விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர்
நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப்
பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் -
இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.
அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய
பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ - ம்.
(22) |
|
|
|
|
வழக்கோரஞ் சொன்னவர் மனை
பாழ் |
-
23. வேதாளஞ்
சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி
படருமே-மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன்
குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார்
மனை.
(பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார்
மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம்
சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும்
- வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி
யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் -
மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் -
பாம்புகள் குடியிருக்கும்.
ஏ ஐந்தும் அசை.
நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர்
குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ - ம். (23)
ஓரம் -
நடுவுநிலையின்மை. |
|
|
|
|
-
24. நீறில்லா நெற்றிபாழ்
நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்
கழகுபாழ்-மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்
பாழே மடக்கொடி யில்லா
மனை.
(பதவுரை) நீறு இல்லா நெற்றி
பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி
பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு
பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு
இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்;
மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க)
மனைவியில்லாத வீடு பாழேயாகும்.
திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே
உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ -
ம். (24) |
|
|
|
|
வரவறிந்து செலவிட
வேண்டும் |
-
25. ஆன முதலில்
அதிகஞ் செலவானான்
மானம் அழிந்து
மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய்
ஏழ்பிறப்புத் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம்
நாடு
(பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம்
ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன்,
மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு
இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன
திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் -
எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன்
ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு
(இதனை) ஆராய்ந்து அறிவாயாக.
வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன்
பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ - ம்.
(25) |
|
|
|
|
பசி வந்திடப் பத்தும்
பறக்கும் |
-
26. மானங்
குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி
தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்
பத்தும் பசிவந் திடப்பறந்து
போம்.
(பதவுரை) பசி வந்திட-பசிநோய்
வந்தால், மானம்-மானமும், குலம் -
குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை -
ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் -
தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும்,
தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய
மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப்
பத்தும் விட்டோடிப்போம்.
மான முதலிய எல்லா நலங்களையும்
கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ - ம்.
தானம் தக்கார்க்கு நீருடன்
அளிப்பது;பதவியும் ஆம் (26) |
|
|
|
|
-
27. ஒன்றை
நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும்
வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும்
நிற்கும் எனையாளும் ஈசன்
செயல்.
(பதவுரை) ஒன்றை நினைக்கின் -
ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் -
அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி
அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும்
கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் -
(இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும்
கடவுளுடைய செய்கைகளாகும்.
இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும்
கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ - ம்.
(27) |
|
|
|
|
-
28. உண்பது நாழி
உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து
எண்ணுவன-கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின்
கலம்போலச் சாந்துணையுஞ் சஞ்சலமே
தான்.
(பதவுரை) உண்பது, நாழி - உண்பது
ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது
நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது
கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்)
கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி
வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின்
கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் -
இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே
இருக்கிறது.
உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள்
இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம்.
(28) |
|
|
|
|
கொடையாளருக்கு எல்லாரும்
உறவினர் |
-
29. மரம்பழுத்தால்
வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங்
கில்லை-சுரந்தமுதம் கற்றா தரல்போற் கரவாது
அளிப்பரேல் உற்றார் உலகத்
தவர்.
(பதவுரை) மரம் பழுத்தால் -
மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார்
- (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர்,
அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை;
கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச்
சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற்
கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ்
வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
கொடையாளர்க்கு எல்லாரும் தாமே
உறவினராவார் எ - ம் (29) |
|
|
|
|
-
30. தாந்தாமுன்
செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன்
பொறிவழியே-வேந்தே ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம்
ஒன்றா வெறுத்தாலும் போமோ
விதி.
(பதவுரை) வேந்தே - அரசனே,
தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த
நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை
மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் -
தாமே அனுபவிப்பார்கள் ; ஒறுத்தாரை என் செயலாம் -
(தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்;
ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார்
எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).
தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம்
முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ -
ம்.(30) |
|
|
|
|