| 21 முதல் 30 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
  
  
    | வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் 
  நலன் |  
 
  
  
    | 
        (பதவுரை) சிவந்த தாமரையாள் - 
      செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - 
      வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், 
      நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும் 
      நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், 
      பேரும் - பேரையும், புகழும் - 
      கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், 
      ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - 
      வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும், 
      என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.
        21   நீரு நிழலு 
        நிலம்பொதியும் நெற்கட்டும்பேரும் புகழும் 
        பெருவாழ்வும்-ஊரும்
 வருந்திருவும் வாழ்நாளும் 
        வஞ்சமில்லார்க்கு என்றுந்
 தருஞ்சிவந்த தாமரையாள் 
        தான்
 
 வஞ்சனை 
      யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் 
      உண்டாகும்    எ - ம். (21)
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) பணத்தைப் 
      பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து 
      வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, 
      கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, 
      கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு 
      விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் 
      நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் 
      பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - 
      இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.
      அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய 
      பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ - ம். 
      (22)
        22.   பாடுபட்டுத் தேடிப் 
        பணத்தைப் புதைத்துவைத்துக்கேடுகெட்ட மானிடரே 
        கேளுங்கள்-கூடுவிட்டிங்
 காவிதான் போயினபின்பு யாரே 
        யநுபவிப்பார்
 பாவிகள் அந்தப் 
        பணம்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | வழக்கோரஞ் சொன்னவர் மனை 
  பாழ் |  
 
  
  
    | 
        (பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார் 
      மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் 
      சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் 
      - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி 
      யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் - 
      மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் - 
      பாம்புகள் குடியிருக்கும்.
      ஏ ஐந்தும் அசை.
      நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் 
      குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ - ம். (23)
      ஓரம் - 
  நடுவுநிலையின்மை.
        23.  வேதாளஞ் 
        சேருமே வெள்ளெருக்குப் பூக்குமேபாதாள மூலி 
        படருமே-மூதேவி
 சென்றிருந்து வாழ்வளே சேடன் 
        குடிபுகுமே
 மன்றோரஞ் சொன்னார் 
        மனை.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) நீறு இல்லா நெற்றி 
      பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி 
      பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு 
      பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு 
      இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; 
      மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) 
      மனைவியில்லாத வீடு பாழேயாகும்.
      திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே 
      உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ - 
      ம். (24)
        24.   நீறில்லா நெற்றிபாழ் 
        நெய்யில்லா உண்டிபாழ்ஆறில்லா ஊருக் 
        கழகுபாழ்-மாறில்
 உடன்பிறப் பில்லா உடம்புபாழ் 
        பாழே
 மடக்கொடி யில்லா 
        மனை.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | வரவறிந்து செலவிட 
வேண்டும் |  
 
  
  
    | 
        (பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம் 
      ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், 
      மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு 
      இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன 
      திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - 
      எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் 
      ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு 
      (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.
      வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் 
      பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ - ம். 
      (25)
        25.  ஆன முதலில் 
        அதிகஞ் செலவானான்மானம் அழிந்து 
        மதிகெட்டுப்-போனதிசை
 எல்லார்க்கும் கள்ளனாய் 
        ஏழ்பிறப்புத் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லனாம் 
        நாடு
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | பசி வந்திடப் பத்தும் 
  பறக்கும் |  
 
  
  
    | 
        (பதவுரை) பசி வந்திட-பசிநோய் 
      வந்தால், மானம்-மானமும், குலம் - 
      குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - 
      ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் - 
      தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும், 
      தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த 
      சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய 
      மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் 
      பத்தும் விட்டோடிப்போம்.
      மான முதலிய எல்லா நலங்களையும் 
      கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ - ம்.
      தானம் தக்கார்க்கு நீருடன் 
      அளிப்பது;பதவியும் ஆம் (26)
        26.  மானங் 
        குலங்கல்வி வண்மை அறிவுடைமைதானந் தவம்உயர்ச்சி 
        தாளாண்மை-தேனின்
 கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் 
        பத்தும்
 பசிவந் திடப்பறந்து 
        போம்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) ஒன்றை நினைக்கின் - 
      ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - 
      அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி 
      அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் 
      கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - 
      (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; 
      எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் 
      கடவுளுடைய செய்கைகளாகும்.
      இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் 
      கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ - ம். 
      (27)
        27.  ஒன்றை 
        நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் 
        வந்தெய்தும்-ஒன்றை
 நினையாத முன்வந்து நிற்பினும் 
        நிற்கும்
 எனையாளும் ஈசன் 
        செயல்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) உண்பது, நாழி - உண்பது 
      ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது 
      நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது 
      கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) 
      கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி 
      வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் 
      கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - 
      இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே 
      இருக்கிறது.
      உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் 
      இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம். 
(28)
        28.  உண்பது நாழி 
        உடுப்பது நான்குமுழம்எண்பது கோடிநினைந்து 
        எண்ணுவன-கண்புதைந்த
 மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் 
        கலம்போலச்
 சாந்துணையுஞ் சஞ்சலமே 
        தான்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | கொடையாளருக்கு எல்லாரும் 
  உறவினர் |  
 
  
  
    | 
        (பதவுரை) மரம் பழுத்தால் - 
      மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் 
      - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், 
      அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; 
      கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் 
      சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் 
      கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் 
      வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
      கொடையாளர்க்கு எல்லாரும் தாமே 
      உறவினராவார் எ - ம் (29)
        29.  மரம்பழுத்தால் 
        வௌவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாவருமங் 
        கில்லை-சுரந்தமுதம்
 கற்றா தரல்போற் கரவாது 
        அளிப்பரேல்
 உற்றார் உலகத் 
        தவர்.
 |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) வேந்தே - அரசனே, 
      தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த 
      நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை 
      மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் - 
      தாமே அனுபவிப்பார்கள் ; ஒறுத்தாரை என் செயலாம் - 
      (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்; 
      ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் 
      எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).
      தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் 
      முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ - 
      ம்.(30)
        30.  தாந்தாமுன் 
        செய்தவினை தாமே யநுபவிப்பார்பூந்தா மரையோன் 
        பொறிவழியே-வேந்தே
 ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் 
        ஒன்றா
 வெறுத்தாலும் போமோ 
        விதி.
 |  | 
		
			|  |  |  |