31 முதல் 40 வரை
|
|
31. கீழ்மகன் நெஞ்சில்
அறவுரை புகாது |
- வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல்
சால அரிதாகும்--அஃதேபோல் வைகலும் நல்லறம் கேட்பினுங்
கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.
(பதவுரை)
வைகலும்- நாள்தோறும், நீருள் கிடப்பினும் -
நீரினுள்ளேயே கிடந்தாலும், கல்லிற்கு-கல்லுக்கு,
மெல்லென்றல்-மென்மையடைதல், சால அரிதாகும் -
சிறிதும் இல்லை, அஃதே போல்-அதுபோல்,
வைகலும் - நாள் தோறும், நல்லறம்-நல்ல
அறநூல்களை, கேட்பினும் - கேட்டாலும், கீழ்
கட்கு-கயவர்களுக்கு, நெஞ்சு-மனமானது, கல்லினும்
வல்லென்னும்-கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவே இருக்கும்.
(குறிப்பு) சால:
உரிச்சொல், மிகுதிப்பொருள், பொருளின் போக்குக் கொண்டு சிறிதும் என
உரைக்கப்பட்டது. (31) |
|
|
|
|
|
32. கீழ்மக்கட்குக் கட்டாயப் படிப்பாலும்
பயனில்லை |
- கயத்திடை உய்த்திடினும்
கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவா தற்றால் - இயற்றி அறவுரை கேட்ட
விடத்தும் அனையார் திறவுரை தேறா தவர்.
(பதவுரை) கயத்திடை - குளத்தினிடை,
உய்த்திடினும்-செலுத்தினாலும், கல் நனையாது-கல்
மெல்லென ஊறியுறாது, என்றும்-எக்காலத்தும்,
பயறுகறி-பயறு களுள் பத்தினிப் பயறாக இருப்பது கறியினிடத்தே,
வேவாது-வேவதில்லை, அற்று-அது போல்,
இயற்றி-விதிகளுக்குட்படுத்தி, அறவுரை
கேட்டவிடத்தும்-அற நூல்களைக் கேட்குமாறு செய்தாலும்,
அனையார்-அக் கீழ்மக்கள், திறவுரை தேறாதவர்-உறுதி
மொழிகளை யுணராதவர்களே யாவர்.
(குறிப்பு)
இடை : ஏழனுருபு. பயறு-முனையினைக் கொண்டிராத பயறு: பத்தினிப் பயறு
.அ: பண்டறி சுட்டு. ஆல்:
அசை.
(32) |
|
|
|
|
|
- அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்ற
பொழுதே பிறநினைத்தி--எற்றே நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு
வாழ்க்கை புலைமயங்கி யன்ன துடைத்து.
(பதவுரை) அற்ற
பொழுதே-பொருளற்ற காலத்தில், அறம்
நினைத்தி-பொருளிருப்பின் அறம் செய்யலாம்; இல்லையே என் செய்வது என்று
நினைத்து வருந்துகின்றாய், யாதொன்றும் பெற்ற பொழுதே-ஏதாவது ஒரு
செல்வத்தினை யடைந்த காலத்திலோ, பிற நினைத்தி-அறத்தினை
மறந்து பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய், நிலைமையில்
நன்னெஞ்சே-ஒரு நிலையில்லாத நல்ல மனமே!,
எற்றே-இஃதென்னே, நின்னொடு
வாழ்க்கை-உன்னோடு கூடிவாழ்தல், புலைமயங்கி அன்ன
துடைத்து-புலைமக்களோடு சேர்ந்து வாழ்வது போலும்.
(குறிப்பு)
புலை-புலைமக்கள், பண்பாகுபெயர். நினைத்தி: முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.
(33) |
|
|
|
|
|
- ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை
முத்தாடை கொண்ட--திருவாளா! வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக வாணாள்
படுவ தறி.
(பதவுரை)
ஒருபால்-ஒருபுறம், திருத்த-தைக்க,
ஒருபால்-மற்றொருபுறம், கிழியும்-கிழிகின்ற,
பெருவாழ்க்கை- பெரிய வாழ்க்கையாகிய,
முத்தாடை-விலையுயர்ந்த உடலாகிய ஆடையை,
கொண்ட-உடுத்த, திருவாளா-செல்வமுடையவனே!
நீ துன்னம் பொய்யே யாக-நீ தைத்தல் பயனின்றி, வாணாள்
படுவது-ஆயுள் நாள் அழிவதை, வீணாள் படாமை அறி-நாள்கள்
வீணாக கழியு முன் அறிக.
(குறிப்பு)
திருவாளன் என்றது இழிவு பற்றியது. தின்னம்-தைத்தல்.
(34) |
|
|
|
|
|
35. அறஞ்செய்யாமையால் வரு
மிழிவு |
- உள்ளநாள் நல்லறஞ் செய்கென்னும்
சாற்றன்றோ
இல்லைநாட் போயேன றிடங்கடிந்து--தொல்லை இடைக்கடையு மாற்றார்
இரந்தார்க்கு நின்றார் கடைத்தலைவைத் தீயும் பலி.
(பதவுரை) தொல்லை இடைக்
கடையும் ஆற்றார்-முன் தாம் செல்வமுடையரா யிருந்தகாலத்தில் அறம் சிறிதும்
செய்யாமல், இல்லை நாட்போய் ஏன்று இடங்கடிந்து
இரந்தார்க்கு-பின் வறியரான காலத்தில் தம்மிடம் விட்டுப் பெயர்ந்து
ஆங்காங்குப் போய் ஏற்றுத் திரிந்து பிறர்பால் இரந்தார்க்கு, நின்றார்
கடைத்தலை வைத்தீயும் பலி-இரக்கப்படுவார் தம் தலைவாயிலில் வைத்தீயும்
பிச்சையானது, உள்ளநாள் நல்லறம் செய்க என்னும்
சாற்றன்றோ-செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் அறத்தை செய்க என்று
அவர்க்குச் சொல்லும் சொல்லாகு மன்றோ?
(குறிப்பு)
சாற்று-சொல், அன்று, ஓ: தேற்றப்பொருளன. செய்க+என்னும்=செய்கென்னும்:
அகரந்தொகுத்தல் விகாரம்.
(35) | |
|
|
|
|
- ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக்
கீந்தாலும் ஏலாய்--திருவாளா! உன்னோடு உறுதி பெரிதெனினும்
இவ்வுடம்பே! நின்னோடு வாழ்தலரிது.
(பதவுரை)
இவ்வுடம்பே-இப் பசிநோயால் வருந்தும் வயிறே, ஒருநாளும்
நீ தரியாய்-(உணவில்லாத காலத்தில்) ஒரு நாளாவது பொறுத்திராய்,
உண்ணென்று சொல்லி இரு நாளைக்கு ஈந்தாலும்-(நல்ல உணவை
மிகுதியாகப் பெற்ற காலத்தில்) இதனை உண்பாயாக என்று கூறி இரண்டு நாளைக்கு வேண்டு
வனவற்றை ஒரே தடவையில் கொடுத்தாலும், ஏலாய்-ஏற்றுக்கொள்ளாய்,
திருவாளா-திருவுடையோனே, உன்னோடு உறுதி பெரிது
எனினும்-உன்னோடு சேர்ந்து வாழ்வதால் அடையும் பயன் சிறந்ததாயினும்,
நின்னோடு வாழ்தல் அரிது-உன்னோடு வாழ்வது துன்பமே.
(குறிப்பு)
உடம்பு: இடவாகுபெயர். அரிது-கூடாது: கூடின் துன்பமே. ''ஒருநாளுணவை''எனத் தொடங்கும்
நல்வழிச் செய்யுளை இதனோடு ஒப்பு நோக்குக. (36)
|
|
|
|
|
|
37. அறத்திற்கு இன்றியமையாதது
அறிவே |
- கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடு
மதுபோலும்--ஒட்டிய காட்சி திரியி னறந்திரியும் என்றுரைப்பர் மாட்சியின்
மிக்கவர் தாம்.
(பதவுரை)
கட்டளை-செங்கல் அறுக்கும் கருவி,
கோடித்திரியின்- கோணலானால், கருதிய-அதனால்
அறுக்கக் கருதிய, இட்டிகையும்-செங்கல்லும்,
கோடும்-கோணலாகும், அதுபோலும்
-அதுபோல்,ஒட்டிய-பொருந்திய, காட்சி
திரியின்-அறிவு வேறுபடின், அறம் திரியும்-அறம்
வேறுபடும், என்று மாட்சியின் மிக்கவர் உரைப்பர்-என்று பெரியார்
கூறுவர்.
(குறிப்பு) தாம்:
அசைநிலை, இட்டிகையும்-உம்: இறந்தது தழுவிய எச்சவும்மை. (37)
|
|
|
|
|
|
38. அறநூலால் அறியவேண்டிய ஆறு
பொருள்கள் |
- தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின்
றுணிவொடு பக்கம்--மலைவின்றி நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார்.
(பதவுரை) நல்
நெறியை-ஒழுக்க நெறியினை, காட்டி-விளக்கி,
அறம் உரைப்பார்-அறநூலை உணர்த்துவோர்,
தலைமகனும்-அருகனும், நூலும்-மெய்ந்நூலும்,
முனியும்-துறவியும், பொருளும்-உண்மைப் பொருளும்,
தொலைவின் றுணிவு ஓடு-அழிவின் துணிவையும்,
பக்கம்-அருகனிடத்தன்பும், இவ்வாறும்-இவ்வாறு
பொருள்களையும், மலைவு இன்றி காட்டி-மாறுபாடு அற்றவனாகக் கொண்டு,
உரைப்பார்-சொல்லுவார்.
(குறிப்பு)
தொலைவின் துணிவு-அழிவின் நிச்சயம்.
(38) |
|
|
|
|
|
39. சமயம் நம்பிக்கையாலே
நடைபெறுவ தென்பது |
- இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும்
இஃதே சென்றாற்றத்--துறந்தார்கள் தம்பாலே வாங்கி யுரைத்ததனால்
ஆராய்ந்து நம்புக நல்ல அறம்.
(பதவுரை)
சென்று-இல்லறத்தினின்று நீங்கி, ஆற்ற துறந் தார்கள்
தம்பாலே-அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே,
வாங்கி உரைத்ததனால்-பெற்றுச் சொன்னதனால், இறந்தும்
பெரிய நூல்-மிகவும் சிறந்த நூல், எம்மதே-எம்முடையதே,
தெய்வம் அறந்தானும் இஃதே-தெய்வமும் இதுவே அறமும் இதுவே,
ஆராய்ந்து-நீவிரும் நன்கு ஆராய்ந்து, நல்ல
அறம்-நல்ல அறமாகிய இதனை, நம்புக-நம்பி
மேற்கொள்வீர்களாக.
(குறிப்பு)
இதன்கண் அறத்தாலாகிய சமய முடிவு கூறப்பட்டுள்ளது. (39)
|
|
|
|
|
|
40. அகத்தூய்மையும் அருளுமே
சிறந்த அறங்களாம் |
- ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத்
துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந்-தொன்றோடொன் றெவ்வா
உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே அவ்வாய தாகும்
அறம்.
(பதவுரை) ஒன்றோடு ஒன்று
ஒவ்வாத-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பாசண்டத்துள்
எல்லாம்-புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று
ஒவ்வா-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பொருள்
தெரிந்து-பொருள் இவையென ஆராய்ந்தறிந்து, ஒன்றோடு ஒன்று
ஒவ்வா-பலவகைப்பட்ட, உயிரோம்பி-உயிர்களைக் காத்து,
உள்தூய்மை பெற்றதே-அகத்தூய்மை பெற்றதே, அவ்வாயது அறம்
ஆகும்-சிறந்த அறமாகும்.
(குறிப்பு)
ஏ-தேற்றப்பொருள் தரு மிடைச்சொல், உள்-அகம்; மனம். (40)
|
|
|
|
|
|