41 முதல் 50 வரை
|
|
- நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான்
போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும் மெய்ந்நூல் தலைப்பட
லாகுமற் றாகாதே கண்ணோடிக் கண்டதே கண்டு.
(பதவுரை) நிறுத்து அறுத்து
சுட்டு உரைத்து பொன் கொள்வான்போல-பொன் வாங்குவோன் அதனைநிறுத்தும்
அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்துவாங்குதல்போல, அறத்திறனும் ஆராய்ந்து
உள்புக்கால்-அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால்,
பிறப்பு-பிறவியினை, அறுக்கும்-நீக்கும்படியான,
மெய்நூல்-உண்மைநூலை,
தலைப்படலாகும்-அடையலாம், கண் ஓடிக்கண்டதே
கண்டு-கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின்,
ஆகாது-உண்மை நூலை அடைய இயலாது.
(குறிப்பு)
அறுத்தல்-வெட்டிப்பார்த்தல், சுடல் - நெருப்பிலிட்டுக் காய்ச்சி
நோக்கல். மற்று:அசைநிலை.ஏ: பிரி நிலைப்பொருள் தரும் இடைச்சொல். (41)
|
|
|
|
|
|
- காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்த
லறிவுடையோர் கண்ணதே--காய்வதன்கண் உற்றகுணந் தோன்றாத தாகும்
உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும்.
(பதவுரை) காய்வதன்கண்
உற்ற-வெறுக்கப்படும் பொருளி லுள்ள, குணம்
தோன்றாததாகும்-குணம்ஆராய்வா னுக்குத் தோன்றாது.
உவப்பதன்கண் -விரும்பப்படு வதன்கணுள்ள, குற்றமும்
தோன்றாக்கெடும் - குற்றமும் தோன்றாது மறையுமாதலால்,காய்தல்
உவத்தல் அகற்றி-வெறுப்பு விருப்புஇல்லாமல், ஒரு பொருட்கண்
ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல்,
அறிவுடையோர் கண்ணதே-அறிவுடையார்செயலாகும்.
(குறிப்பு) ஏ:
தேற்றப்பொருள் தருமிடைச்சொல், உம்மை இறந்தது தழுவியது. (42)
|
|
|
|
|
|
43. உண்மைத் துறவியினை உணரு
முறை |
- துறந்தார் துறந்தில ரென்றறிய
லாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம்--துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றால்
காண*லாம் மற்றவர் உள்ளம் கிடந்த வகை.
(பா-ம்) *‘கொடுப்பவற்றார்
காண’
(பதவுரை) துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம்-துறவிகள்
மேற்கொண்டொழுகும் வேடத்தால், துறந்தார் துறந்திலர் என்று
அறியலாகும்-பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம், அவர்
உள்ளங் கிடந்தவகை-அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை, துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம்-அவர்கள் மற்றவர்களிடமிருந்து
ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும்
அறியலாம்.
(குறிப்பு)
வேடம்-வேஷம், கொள்ளுதல்-பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக்
கொண்டு மற்றவை விடல், கொடுத்தல். உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல்.
மற்று:
அசை.
(43) |
|
|
|
|
|
44. உம்ப ருலகுக் குரியார்
இவரென்பது |
- இந்தியக் கொல்கா விருமுத்
தொழில்செய்தல்
சிந்தைதீ ரப்பியத்தின் மேலாக்கல்--பந்தம் அரித
லிவையெய்து* மாறொழுகு வார்க்கே உரிதாகும் உம்ப ருலகு.
(பதவுரை) இந்தியக்கு-இந்திரியத்துக்கு,
ஒல்கா-தளராத, இரு முத்தொழில் - இரண்டு
மூன்றுமாகிய ஐந்து இந்திரியங்களின் தொழிலை, செய்தல்-இயற்றுதல்,
சிந்தை-அவாவினை, தீர-ஆற்ற,
அப்பியத்தின்மேல் ஆக்கல்-வெறுத்து அறுத்தல்,
பந்தம்-பாசக்கட்டினை, அரிதல்-கெடுத்தல்,
இவை-ஆகிய இவை, எய்தும் ஆறு-பொருந்தும்படியாக,
ஒழுகுவார்க்கே-நடக்கிறவர்களுக்கே, உம்பர்
உலகு-மேலுலகம், உரி(த்)தாகும்-உரியதாகும்.
(குறிப்பு)
இந்தியக்கு-இந்திரியத்துக்கு: அத்துச்சாரியை தொகை.
இந்நூலாசிரியரே பின் இந்தியக் குஞ்சரத்தை ‘ஞானவிருங்கயிற்றால்’ என்று குறித்தலும்
காண்க. இவ்வாசிரியர், ‘ஆர்வில் பொறி யைந்தில்’ என்பது போல், வள்ளுவரும்,
“உரனென்னுந் தோட்டியா னோரைந்தும் காப்பான். வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”
எனக் கூறியிருத்த லுணர்க. அப்பியம்-அப்பிரியம் என்பதன் விகாரம். இனி அப்பியம்
என்பதை அவ்வியம் என்பதின் திரிபாகக் கொண்டு அப்பியத்தின் மேலாக்கல் என்பதற்கு
மனத்தைக் கோட்டமின்றிச் செய்தல் என்க. தீர்தல்-மிகுதல், உரித்து என்பது உரிது என
எதுகை நோக்கி இடை குறைந்து வந்தது. இருமுத்தொழில் அறுவகைத் தொழிலுமாம்.
அவ்வியம்-அவியம் என்பதன் விரித்தல்
விகாரமுமாம்.
(44)
(பா-ம்) *
‘வருவா ரிவையெய்து’ |
|
|
|
|
|
- அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி
தன்னியல்பே நாடும்--அழலதுபோல் காமாதி யாலாங் கடுவினைக்
கட்டழித்துப் போமாறு செய்வார் புரிந்து.
(பதவுரை) அழல்
அடையப்பட்டான் - சூரிய வெப்பத்தால் தெறப்பட்டவன், அதற்கு
மாறுஆய - அதற்குப் பகையான நிழல் ஆதி தன்னியல்பே
நாடும் - நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான். அழலது
போல்-அதனைஅடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,காமம்
ஆதியால் ஆம்-காமவெகுளி மயக்கங்களால் ஆகிய, கடுவினை கட்டு
அழித்து-கொடியவினையாலாகிய தளையை அழித்து, போமாறுபுரிந்து
செய்வார்-வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம்
செய்வோரேமுனிவர் ஆவர்.
(குறிப்பு) நிழல்
ஆதி- நிழல், நீர், காற்று, உணவு,உடை என்பன. (45)
|
|
|
|
|
|
46. ஒழுக்கமே விழுப்பம்
தரும் |
- வெப்பத்தா லாய வியாதியை வெல்வதூ உம்
வெப்பமே
என்னார் விதியறிவார்--வெப்பம் தணிப்பதூஉம் தட்பமே தான்செய்
வினையைத் துணிப்பதூஉம் தூய வொழுக்கு.
(பதவுரை) விதி
அறிவார்-நோய் நீக்கும் நெறியினை அறிந்தோர், வெப்பத்தால்
ஆய-வெப்பத்தினாலாகிய,வியாதியை-நோயை,
வெல்வதூஉம்-போக்குவதும்,வெப்பமே
என்னார்-வெப்பமே என்று சொல்லார்,வெப்பம் தணிப்பதுவும்
தட்பமே-வெப்பத்தைப் போக்குவதும் குளிர்ச்சியே, (அதுபோல்) தான்
செய்வினையை-தான் செய்த தீவினையை,
துணிப்பதூஉம்-அழிப்பதும், தூய ஒழுக்கு-குற்றமற்ற
ஒழுக்கமேயாகும்.
(குறிப்பு)
தணிப்பதூஉம், வெல்வதூஉம், துணிப்பதூஉம் : இன்னிசை யளபெடைகள், ஏகாரம்:
முன்னது அசை நிலை: பின்னது தோற்றம். (46)
|
|
|
|
|
|
47. பொய்ந் நூல்களின்
இயல்பு |
- தத்தம திட்டம் திருட்ட
மெனவிவற்றோ
டெத்திறத்தும் மாறாப் பொருளுரைப்பர்--பித்தரவர் நூல்களும்
பொய்யேயந் நூல்விதியி நோற்பவரும் மால்கள் எனவுணரற்
பாற்று.
(பதவுரை)
பொருள்-தாம் கூறும் பொருள்களை, தத்தமது - தங்கள்
தங்கள், இட்டம்-விருப்பம்,
திருட்டம்-காட்சி, என இவற்றோடு-என்ற
இவையோடு, எத்திறத்திலும் மாறா உரைப்பர்-ஒரு சிறிதும்
பொருந்தாவாறு உரைப்பவர்களை,பித்தர் என-பைத்தியக்காரர் எனவும்,
அவர் நூல்களும்பொய்யே என-அவர் கூறும் நூல் களைப் பொய்ந் நூல்களே
எனவும், அந்நூல் விதியின்நோற்பவரும் -அந்நூல்கள் கூறும் நெறியில்
நின்று தவஞ்செய்வோரும்,மால்கள் என-மயக்கமுடையார் எனவும்,
உணரற்பாற்று-உணர்தல் வேண்டும்.
(குறிப்பு)
இட்டம்-இஷ்டம்: மனத்தே கண்டது. திருட்டம்-திருஷ்டியிற் படுவது; காட்சி. ஏ:
தேற்றப்பொருள். (47)
|
|
|
|
|
|
48. மெய்யுணர்வு நற்கதிக்
கின்றியமையாமை |
- குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முள்
தெருட்டி வழி *சொல்லிச் சேறல்--திருட்டேட்டம் மாறு கொளக்கிடந்த
மார்க்கத்தால் நற்கதியில் ஏறுதும் என்பா ரியல்பு.
(பதவுரை)
திருட்டம்-ஐம்புலக் காட்சியும், இட்டம்- உள்ள
உணர்ச்சியும், மாறுகொளக் கிடந்த மார்க்கத் தால் - செலுத்தும்
நெறிகள் மெய்ந் நெறிகளின் மாறுபடக்கிடப்பதை (அறியாமல்) அந்நெறியிற்
சென்று நற்கதியில் ஏறுதும் என்பார். இயல்பு-நற்கதியை அடையக்கருதுவோர்
செயல், குருட்டுச் செவிடர் கள்-குருடுஞ்செவிடுமாகிய இரு தன்மையையும்
ஒருங்கே அடைந்த இருவர், கோல்விட்டு-கோலினு தவியாலும்,
தம்முள் வழி தெருட்டிச் சொல்லி-ஒருவருக்கொருவர் வழியின
தியல்பைவிளக்கிக்கொண்டும், சேறல்-குறித்த இடத்தினை
அடையக்கருதிச் செல்லு தலை நிகர்க்கும்.
(குறிப்பு)
திருட்டம்-பார்வை: உபலக்கணத்தல் ஐம்புலக்காட்சியினை யுணர்த்தியது.
இட்டம் - கருத்து. திருட்ட+ இட்டம்=திருட்டேட்டம்: வடமொழிக் குணசந்தி. சேரல்=செல்
+ தல். ஏறுதும்: தன்மைப்பன்மை வினைமுற்று.
(48) |
|
|
|
|
|
49. அறவுரையை உரைப்பவரும்
கேட்பவரும் |
- அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்
தறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே--மற்றதனை மாட்சி புரிந்த மதியுடை
யாளரே கேட்பர் கெழுமி யிருந்து. (பா-ம்.) *தெருட்டு
வழி
(பதவுரை) கற்று அறிந்த
மாந்தர்-மெய்ப்பொருளைக்கற்றுத் தெளிந்த மாந்தர், அற்றறியும்
காரணத்தை-பற்றற்றுத் துறந்து அறியவேண்டிய மெய்ந் நூல்களை அறியும்
காரணத்தையும், அறவுரையை - அறப் பொருளையும், ஆராய்ந்து
உரைப்ப - ஆராய்ச்சி செய்து உரைப்பர்.
அதனை-அவ்வுரையை, மாட்சி புரிந்த
மதியுடையாளரே-நற்குணமிக்க அறிவுடையவர்களே,கெழுமி
இருந்து-உளமிசைந்து உரிமை யுடன், கேட்பர்-கேட்பராவர்.
(குறிப்பு)
அறுதல்-பற்றொழிதல். அறவுரை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ: முன்னது
அசைநிலை;பின்னது பிரிநிலை. (49) |
|
|
|
|
|
- உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில்
தலைமகனோ டின்ன--ஒருவாறு கண்டு கருதிக் கயக்கறத் தேர்ந்தபின் கொண்டுவீ
டேற்க வறம்.
(பதவுரை) உருவும் வடிவமும்
ஒழுக்கமும்-நன்னடக்கையும், நூலும்-உரைக்கும் நூலும்,
பொருளும்-அந்நூலுட் கூறப்படும் பொருளும், பொருவில்
தலைமகனோடு இன்ன-ஒப்பில்லாதுயர்ந்த இறைவனுமாகியஇவற்றை,
ஒருவாது - நீங்காது, கண்டு - ஆராய்ந்து,
கருதி-சிந்தித்து, கயக்கு அற தேர்ந்த
பின்-கலக்கமில்லாதுணர்ந்த பின்னர், அறம்
கொண்டு-அறத்தினை மேற்கொண்டு, வீடு ஏற்க-முத்தியை
அடைய முயல்க.
(குறிப்பு)
உருவு-தொலைப் பொருள்களின் வடிவினையுணருங் காட்சியறிவு. ஏற்க: வியங்கோள்
வினை. (50) |
|
|
|
|
|