71 முதல் 80 வரை
|
|
- தேசுந் திறனறிந்த திட்பமும்
தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக் கற்றல் கடனறிதல்
கற்றா ரினத்தராய் நிற்றல் வரைத்தே நெறி.
(பதவுரை) தேசும்-கீர்த்தியும், திறன்
அறிந்த திட்பமும்-நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும்
உடையராய், தேர்ந்து உணர்ந்து-மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து,
மனத்தகத்து மாசு இல்லாமை-மனத்திடைக் குற்றமில்லாமல்,
ஆசு இன்றிக் கற்றல்-மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும்,
கடன் அறிதல்-தனது கடமையை அறிதலும், கற்றா ரினத்தராய்
நிற்றல்-கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே
நெறி-எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம்
ஆகும்.
(குறிப்பு)
இல்லாமை: எதிர்மறை வினையெச்சம். வரைத்து: ஒன்றன்பாற்
குறிப்பு வினைமுற்று. ஏ:
அசைநிலை. (71) |
|
|
|
|
|
72. மக்கட்குக் கல்வியின்
இன்றியமையாமை |
- எப்பிறப் பாயினும் ஏமாப்
பொருவற்கு
மக்கட் பிறப்பிற் பிறிதில்லை-அப்பிறப்பில் கற்றலும் கற்றவை
கேட்டலும் கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின்,
(பதவுரை) எப்பிறப்பாயினும்-வேறு எந்தப்
பிறப்பானாலும், மக்கட்பிறப்பின்-மக்கட் பிறப்பினைப் போல,
ஒருவற்கு-ஒருவனுக்கு, ஏமாப்பு-இன்பம் செய்வது,
பிறிது இல்லை, - வேறு ஒன்று இல்லை,
அப்பிறப்பில்-அம் மக்கட் பிறப்பில்,
கற்றலும்-கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவை
கேட்டலும்-கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும்,
கேட்டதன்கண் நிற்றலும்-கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும்,
கூடப்பெறின்-கூடப் பெற்றால்.
(குறிப்பு)
“பெறின்பிறிதில்லை” என முடிக்க. பெறின்: எதிர்கால
வினையெச்சம். கேட்ட+அதன்கண்=கேட்டதன்கண்: அகரந் தொகுத்தல்
விகாரம்.
(72) |
|
|
|
|
|
73. கல்விக்கழகு கரவின்றி
வாழல் |
- கற்றதுவுங் கற்றொருபால்
நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக
மறித்திட்டுத்-தெற்றென நெஞ்சத்துட் டீமையெழுதருமேல் இன்னாதே கஞ்சத்துட்
கற்பட்டாற் போன்று.
(பதவுரை) கற்றது கற்று ஒருபால்
நிற்பவும்-கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலாய அறிவு ஒழுக்கத்திற் கலவாது
ஒருபுறம் நிற்கவும், கடைப்பிடி மற்றொருபால்
போகவும்-எடுத்தகருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் றுணிபுகளிற்
றிறம்பிமற்றொருபுறஞ் செல்லவும், மறித்திட்டு-நல்வழிச் செலவைத்
தடுத்து, நெஞ்சத்துள்-மனத்தின்கண்ணே,
தெற்றென-கடுக, தீமைஎழுதருமேல்-தீய எண்ணந்
தோன்றுமாயின், கஞ்சத்துள்-தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள்,
கல் பட்டால் போன்று-பொருந்திய கல்லே போல,
இன்னாது-அது மிகத் துன்பந் தருவதாகும்.
(குறிப்பு)
கரவு-தீய எண்ணம். எழுதரல்-எழுதல;் தரு: துணைவினை,
கஞ்சத்துள்-அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவினிடத்தே
எனலுமாம். (73) |
|
|
|
|
|
74. கற்றவர் செய்யுந் தவற்றினைப் பலரும்
காண்பர் |
- விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை
நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப் பதிப்பட்டு வாழ்வார்
பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு.
(பதவுரை) விதிப்பட்ட நூல் உணர்ந்து-ஒழுக்க நூல்களை
உணர்ந்து, வேற்றுமை நீக்கி-அவைகளுக் குடன்பாடாகாதனவற்றைச்
செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை-ஞான நூல்களை, கை
இகந்து-எல்லையில்லாமல், ஆக்கி-உலகோர் பொருட்டுச்
செய்து, பதிப்பட்டு வாழ்வார்-இறைவனையடைய விரும்பி
வாழ்கின்றவர், பழியாய செயதல்-பிறர் பழித்தற் கேதுவான
செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில் பட்ட மறு-சந்திரனிடத்துத்
தோன்றும் களங்கமே யாகும்.
(குறிப்பு)
வேற்றுமை-மதவேறுபாடு முதலியன எனலுமாம்.
பதிப்பட்டு-மனவமைதியுற்று எனலுமாம். வாழ்வார் வினையாலணையும்
பெயர். (74) |
|
|
|
|
|
75. கற்றறிமூடரைக் கண்டு
விலகுக |
- பற்றொடு செற்றம் பயமின்றிப்
பலபொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-கற்றும் கடையாய செய்தொழுகும்
காரறிவி னாரை அடையா ரறிவுடை யார்.
(பதவுரை) பற்றொடு செற்றம்பயமின்றி-ஆசையும்பகையும்
அச்சமும் இல்லாமல், பல்பொருளும்-பல பொருள்களினியல்பும்,
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-விடாது அறிந்த அருகக்கடவுள்
கூறியவற்றை, கற்றும்-படித்தும்,
கடையாய-பழிக்கப்படுவனவற்றை,
செய்தொழுகும்-செய்தொழுகின்ற,
காரறிவினாரை-அறிவில்லாதவர்களை, அறிவுடையார்
அடையார்-அறிவுடை யவர்களைடையார்கள்.
(குறிப்பு)
முற்ற உணர்ந்தான்-முழுவது முணர்ந்த இறைவன் எனலுமாம்.
உணர்ந்தான், மொழிந்தன: வினையாலணையும் பெயர்கள். கருமை+ அறிவு= காரறிவு,
கரிய அறிவு, அறிவின்மை
(75) |
|
|
|
|
|
76. கல்வி முதலியன செல்வங்கட்குக்
காரணமாம் |
- நல்வினைப்பி னல்லால் நறுந்தா
மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான் ஓத்தும் ஒழுக்கமும்
தானமும் உள்வழி நீத்தல் ஒருபொழுது மில்.
(பதவுரை) சிறந்தார் பின் ஆயினும்-தன்னை
நேசிப்பவர்களிடத்திலாயினும், நல்வினைப் பின் அல்லால்-நல்வினை
காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல
தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள்-செல்லாள்,
நல்லவினை-அந்நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும்
உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து,
ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல்
இல்லை.
(குறிப்பு) நறுந்தாமரை-அழகின் நலமிக்க
செந்தாமரை, ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர். வழி ஏழனுருபு.
தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய
தருமம்.
(76) |
|
|
|
|
|
77. தன்னை உயர்த்துங் கருவி தானே
யாவன் |
- தன்னிற் பிறிதில்லை தெய்வம்
நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை இறைவனாச் செய்வானுந்
தானேதான் தன்னைச் சிறுவனாச் செய்வானுந் தான்.
(பதவுரை) நெறி நிற்பில்-ஒருவன் நன்னெறிக்கண்
நிற்பானாயின், தன்னின் தெய்வம் பிறிதில்லை-அவனின் வேறான
தெய்வம் ஒன்று இல்லை, தான் ஒன்றானும் நெறிநில்லானேல்-அவன்
ஒருவிதத்திலும் நன்னெறிக்கண் நில்லானாயின், அவனிற்றாழ்ந்தது வேறொன்றில்லை,
தன்னை இறைவனாச் செய்வானும் தானே-தன்னை மற்றவர்களுக்குத்
தலைவனாகச் செய்துகொள்பவனும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும்
தான்-தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்துகொள்பவனும் தானே
யாவன்.
(குறிப்பு) தானே-ஏ: பிரிநிலைப்
பொருள். “நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து
முடித்தது இசையெச்சம்.
(77) |
|
|
|
|
|
78. தீவினையை ஒழித்து நல்வினையை
நாடுவாயாக |
- அஞ்சினா யேனு மடைவ
தடையுங்காண்
துஞ்சினா யென்று வினைவிடா-நெஞ்சே அழுதா யெனக்கருதிக்
கூற்றொழியா தாற்றத் தொழுதேன் நிறையுடையை யாகு.
(பதவுரை) நெஞ்சே அஞ்சினாயேனும்-மனமே! துன்பத்தைக்
கண்டு அச்சமுற்றாயானாலும், அடைவது அடையும் காண்-வரும் துன்பம்
வந்தே சேரும், துஞ்சினாய் என்று வினை விடா-தீவினைப் பயனைப்
பொறாமல் இறந்தாயென்று கருதிச் செய்த வினைகள் மறுபிறப்பில் உன்னைத் தொடராமலிரா,
அழுதாயெனக் கருதி-இறப்புக் கஞ்சி அழுதாய் என்று கருதி,
கூற்று ஒழியாது-வந்த யமன் உயிரைக் கவராது நீங்கான்:
(ஆதலால்), ஆற்றத் தொழுதேன்-உன்னை மிக வணங்குகின்றேன்,
நிறை உடையை ஆகு-நிறையுடையை ஆகுவாயாக.
(குறிப்பு)
நிறை-மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள்,
ஆகு: ஏவலொருமை
வினைமுற்று. (78) |
|
|
|
|
|
79. தற்புகழ்ச்சியினை
யொழிப்பாயாக |
- பலகற்றோம் யாமென்று தற்புகழ
வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் சிலகற்றார் கண்ணும்
உளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல்.
(பதவுரை) அலர் கதிர்
ஞாயிற்றை-பரந்தகதிர்களையுடைய சூரியனை, கைக் குடையும்
காக்கும்-கையிலுள்ள சிறிய குடையும் மறைக்கும்; (ஆதலால்) யாம் பல
கற்றோம் என்று-யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று, தற்புகழ
வேண்டா-ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாகாது, பல
கற்றார்க்கு-பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும், அச்சு
ஆணி அன்னது ஓர் சொல்-அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல்,
சில கற்றார் கண்ணும் உளவாம்-சில நூல்களைப் பயின்றாரிடத்து
உளவாதலும் உண்டு.
(குறிப்பு) கைக்குடையும்,
சிலகற்றார் கண்ணும்: உம்மைகள் இழிவு சிறப்புப் பொருளை அச்சு ஆணி-தேர்ச்
சக்கரத்தின் இருசில் கோக்கும் ஒருவகை இருப்பாணி; அது சக்கரத்தினைக்
கழன்றோடவிடாமல் காக்கவல்லது.
(79) |
|
|
|
|
|
80. பொறுமையினை மேற்கொள்ளு
முறை |
- தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின்
தானவனைப்
பின்னை யுரையாப் பெருமையான்-முன்னை வினைப்பயனு மாயிற்றா
மென்றதன்கண் மெய்ம்மை நினைத்தொழிய நெஞ்சினோ யில்.
-
(பதவுரை)
ஒருவன் தன்னை இகழ்ந்து உரைப்பின்-ஒருவன் தன்னை இகழ்ந்து
கூறினால், பின்னை-பின்னர், தான்-தானும், அவனை உரையாப்
பெருமையான்-அவனை இகழ்ந்து கூறாத பெருமையை உடையோன், முன்னை
வினைப்பயனும் ஆயிற்றாம் என்று-முற்பிறப்பில் தான் செய்த தீவினைப்பயனும்
இதனால் முடிந்தது என்று, அதன்கண் மெய்ம்மை நினைத்து ஒழிய-அதன்
உண்மையை நினைத்து அதனைக் கருதாதொழிய, நெஞ்சில் நோய்
இல்-அவன் மனத்தின் கண்ணும் துன்பம் இலவாம்.
(குறிப்பு)
உரையா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நோய்-வருத்தம்; துன்பம்.
“நெஞ்சினும்” எனற்பாலது தொகுத்தல் பெற்று, ‘நெஞ்சின்’ என நின்றது.
(80) | |
|
|
|
|