81 முதல் 90 வரை
|
|
81.
பொறுமையே சிறந்த தவமாகும் |
- எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல்
தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும்-மெள்ள அறிவென்னு
நீரால் அவித்தொழுக லாற்றின் பிறிதொன்று* வேண்டா தவம்.
-
(பதவுரை)
பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல்-தன்னைப் பிறர் இகழ்ந்து
கூறும் கடுஞ்சொல். கொள்ளி வைத்தாற் போல்-நெருப்பினாற்
சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும்-தன் மனத்தில்
துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால்-அறிவாகிய
நீரால், மெள்ள-அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின்-அத்
துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும்-வேறு தவம்
ஒன்றும், வேண்டா-செய்ய வேண்டுவதில்லை.
(குறிப்பு)
கொள்ளி-எரிகின்ற கொள்ளிக்கட்டை, இன்னாச் சொல்-வசை மொழி; துன்பம்
விளைத்தலின் அங்ஙனம் கூறப்பட்டுள்ளது. மெள்ள:
குறிப்புவினையெச்சம்.
(81) |
|
|
|
|
|
82. கடுஞ்சொல்
களைகணையும் ஒழிக்கும் |
- நம்மைப் பிறர்சொல்லும் சொல்லிவை
நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவையென் றெண்ணி உரைகள் பரியர்
துரைப்பாரில் யாரே களைகண தில்லா தவர்.
-
- *பிறிதெனினும்
-
(பதவுரை)
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை-நம்மைக் குறித்துப் பிறர்
இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச்
சொல்லும் இழுக்கு இவை-நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை,
என்று எண்ணி-என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில்-தாம்
பிறர்பால் இரங்காது கடுஞ்சொற் கூறுவராயின் அவரைப்போல், யாரே களைகணது
இல்லாதவர்-பற்றுக் கோடற்றவர் பிறர் யார்? ஒருவருமிலர்.
(குறிப்பு)
களைகண்-ஆதரவு: பற்றுக்கோடு இல்: ஐந்தனுருபு: ஒப்புப்பொருள். ஏ: எதிர்றை
வினாவிடைச் சொல். அது:
சாரியை. (82) | |
|
|
|
|
83. முற்பகல் செய்வன
பிற்பகல் விளையும் |
- பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை
யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத்-தனக்கின்னா வித்தி விளைத்து
வினைவிளைப்பக் காண்டலிற் பித்து முளவோ பிற.
-
(பதவுரை)
பிறர்க்கு இன்னா செய்தலின்-மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக்
காட்டிலும், பேதைமை இல்லை-அறியாமை வேறு ஒன்று இல்லை,
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு-மற்றவர்க்குச் செய்யும் துன்பம்
என்று பெயர் வைத்து, தனக்கு இன்னாவித்தி விளைத்து வினை விளைப்பக்
காண்டலின்-தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு
செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ-பிற
அறியாமைதான் வேறு உண்டோ? நீயே கூறு.
(குறிப்பு) இன்:
இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருள். “வேலிக்கிடு முள் காலுக்காம்” என்பது
பழமொழி. ஓ: எதிர்மறை வினாவிடைச் சொல்.
(83) |
|
|
|
|
|
- முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின்
றுருகக் கலந்துரைத்துப்-பின்னின் றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே
தேவர் விழித்திமையார் நின்ற நிலை
-
(பதவுரை)
தேவர் விழித்து இமையார் நின்ற நிலை-தேவர்கள்
விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று-ஒருவன்
எதிரில் நின்று, கல் நின்று உருக-கல்லும் உருகுமாறு
முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து-முகமலர்ந்து வாயால்
இன்சொற்கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று-அவள் அகன்ற
பின்னர், இழித்துரைக்கும்-அவனையே இகழ்ந்து கூறுகின்ற,
சான்றோரை அஞ்சியே-கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும்
அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும்.
(குறிப்பு)
அஞ்சியே: ஏகாரம் தேற்றப்பொருள் கொண்டுள்ளது. தேவர்கள் இயல்பிலே இமையாமல்
நின்ற நிலையினை இங்ஙனத் தொடர்புபடுத்திக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம்.
கயவர்களைச் சான்றோர் என்றது இழிவுபறறியாம்.
(84) | |
|
|
|
|
85. புறங்கூறாமையின்
உயர்வு |
- பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற்
படாமைத் தவிர்ப்பானும்-மெய்ம்மேல் பிணிப்பண் பழியாமை பெற்ற
பொழுதே தணிக்கு மருந்து தலை.
-
(பதவுரை)
புறனுரையைத் தன்மேல் படாமை தவிர்ப்பான்-புறங்கூறலாகிய தீமை
தன்கண் நிகழாமல் காப்பவன், பொய்ம்மேற்கிடவாத நாவும்-பொய்யை
மேற்கொள்ளாத நாவையும், மெய்ம்மேல் பிணிப் பண்பு
அழியாமையும்-மெய் பேசுதலில் பிணிப்புண்டிருக்கும் பண்புடைமை நீங்காமையையும்,
பெற்ற பொழுதே-பெற்றவப்போதே, தணிக்கு மருந்து
தலை-பிறவிப் பிணி தணிக்குந் தலையாய மருந்தைப்
பெற்றவனாவான்.
(குறிப்பு)
“தவிர்ப்பானும்” என்பதன்கண் உள்ள உம்மையைப் பிரித்தெடுத்து, “பண்பழியாமையும்”எனக்
கூட்டுக. பொழுதே: ஏகாரம் பிரிநிலைப் பொருளது.
(85) | |
|
|
|
|
86. குடியால் உண்டாகுந்
தீங்கு |
- ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடைய
ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும் கட்டுரையால் கோதப் படுமேல்
இவையெல்லாம் விட்டொழியும் வேறாய் விரைந்து.
-
(பதவுரை) களி என்னும்
கட்டுரையால்-"கட்குடியன்" என்னும் பொருள்சேர் பழிச்சொல்லால்,
கோதப்படுமேல்-ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால்,
ஒளியும்-எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும், ஒளி சான்ற
செய்கையும்-அம் மதிப்பினுக்கேற்ற செயலும், சான்றோர்
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் "இவர் தெளிந்த
அறிவினையுடையவர்" என்று கூறும் புகழும், இவையெல்லாம்-ஆகிய இவை
யெல்லாம், வேறாய்-வேறுபட்டு, விரைந்து-விரைவில்,
விட்டொழியும்-அவனை விட்டு நீங்கும்.
(குறிப்பு)
கோதப்படல்-குற்றப்படுத்தப்படல். களி=கள்+இ; கள்ளினை உட் கொள்பவன்; இ:
வினைமுதற்பொருள் தரும் விகுதி.
(86) | |
|
|
|
|
87. சூதுப் போரால்
விளையும் தீமை |
- ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை
யெனப்படும் மேன்மையும்-சூது பொருமென்னும் சொல்லினால் புல்லப்
படுமேல் இருளாம் ஒருங்கே இவை.
-
(பதவுரை) சூது பொரும் என்னும்
சொல்லினால்-சூதாடுவான் என்னும் பழியால்,
புல்லப்படுமேல்-ஒருவன் பற்றப்படுவானாயின்,
ஓதலும்-அறிவு நூல்களைக் கற்றலும், ஓதி
உணர்தலும்-கற்றவற்றை ஆராய்தலும், மேதை எனப்படும்
மேன்மையும்-அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும், இவை
ஒருங்கே-ஆகிய இவை முழுதும், இருளாம்-அவனை விட்டு
மறையும்.
(குறிப்பு)
பொருதல்-போர் செய்தல்; ஆடுதல், சூதுப் போரால் அறிவு மழுங்கி விடும் என்பது
கருத்து,
(87) | |
|
|
|
|
88. மானங் கெடின் மடிதலே
நன்று |
- தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால்
உணற்கு
விரும்புங் குடரை-வனப்பற ஆம்பற்றாள் வாடலே போல
அகத்தடக்கித் தேம்பத்தாங் கொள்வ தறிவு.
(பதவுரை)
தனக்கு தகவு அல்ல செய்து-தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச்
செய்து, ஓர் ஆற்றால் உணற்கு விரும்புங்குடரை-ஒருவாறு உண்ணுதலை
விரும்புகின்ற குடலை, ஆம்பம்தாள் வாடலேபோல-நீரற்றவிடத்தில்
ஆம்பற்கொடி வாடுதலே போல, வனப்பு அற-அழகு கெடவும்,
தேம்ப-இளைக்குமாறும், தாம்
அகத்தடக்கிக்கொள்வது-தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது,
அறிவு-அறிவுடைமையாகும்.
(குறிப்பு)
குடர்-குடல்: இறுதிப்போலி. கொள்வது தொழிற்பெயர். வனப்புற என்பதும்
பாடம். ஆங்கு:
அசைநிலை, (88)
|
|
|
|
|
|
- அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடைய
னென்றுரைக்கும் தேசும்-பிறனில் பிழைத்தா னெனப்பிறரால் பேசப்
படுமேல் இழுக்காம் ஒருங்கே யிவை.
(பதவுரை)
பிறன் இல் பிழைத்தான் என-அயலான் மனைவியை விரும்பினான் என்று,
பிறரால் பேசப்படுமேல்-மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின்,
அறனும்-அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த
செய்கையும்-அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன்
உடையன் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் நெறியுடையன் என்று
சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே-இவை முழுவதும், இழுக்கு
ஆம்-பழியாம்.
(குறிப்பு)
இல்-மனையாள் இடவாகுபெயர். அறன் திறன் என்பன அறம், திறம் என்பவற்றின்
போலி. (89)
|
|
|
|
|
|
90. காமக் கருத்தின்
கொடுமை |
- சாவாய்நீ நெஞ்சமே! சல்லிய வென்னைநீ
ஆவதன்கண்
ஒன்றானும் நிற்கொட்டாய்-ஓவாதே கட்டழித்துக் காமக் கடற்கென்னை
ஈர்ப்பாயே விட்டெழுங்கால் என்னாவாய் சொல்.
(பதவுரை)
நெஞ்சமே நீ சாவாய்-மனமே! நீ கெடுவாயாக, சல்லிய
என்னை-கலக்கமுற்ற என்னை, ஆவதன்கண் ஒன்றானும் நிற்க
ஒட்டாய்-நன்னெறியில் ஒருசிறிதும் நிற்குமாறு விடாமல்,
ஓவாதே-ஒழிவின்றி, கட்டு அழித்து-உறுதியைக்
கெடுத்து, காமக் கடற்கு-ஆசையாகிய கடலுக்கு, என்னை
ஈர்ப்பாய்-என்னை இழுக்கின்றாய், விட்டெழுங்கால்-உன்
பற்றைவிட்டு நான் எழுங்கால், நீ என் ஆவாய்-நீ யாது
நிலையடைவாய், சொல்-அதனை எனக்குக் கூறு.
(குறிப்பு)
''ஒட்டாய்'' என்பது முற்றெச்சம். நிற்க+ஒட்டாய்-நிற்கொட்டாய்: அகரந்
தொகுத்தல். ஈர்ப்பாயே என்பதில் 'ஏ' ஈற்றசை. ஓவாதே என்ற எதிர்மறை
வினையெச்சத்தில் ஓவு: பகுதி; ஏ: அசைநிலை. (90)
|
|
|
|
|
|