111 முதல் 120 வரை
|
|
111. பெண்ணென்றால் விண்ணும்
நிறையும் |
- வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி
ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா ஓதுமின் ஓதி
அடங்குமின் என்னுஞ்சொல் கூதற்குக் கூதி ரனைத்து.
(பதவுரை)
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-மூதேவி போன்ற ஒருத்தியைப்
பாடுமிடத்து, ஞாலத்தார் விரைந்து ஓடி வேட்டு அவாய்க்
கேட்பர்-உலகத்தவர் விரைந்து சென்று அதனை மிக விரும்பி கேட்பர்,
கோட்டிலா ஓதுமின்-மாறுபாடில்லாத அற நூல்களைக் கற்பீர்களாக,
ஓதி அடங்குமின்-கற்று அவற்றிற்குத் தகவொழுகுங்கள்,
என்னுஞ் சொல்-என்று பெரியோர் கூறுஞ்சொல், கூதற்குக்
கூதிரனைத்து-முன்னமே குளிரால் நடுங்கிய உடலினிடத்தே வீசிய குளிர்காற்றை
யொக்கும் (வெறுக்கப்படும்.
(குறிப்பு)
கிழத்தியைப் பாடுங்கால்: பெண்ணொருத்தி பாடுமிடத்து எனலாம். இப்பொருள் முதல்
வேற்றுமையினிடத்தே இரண்டாம் வேற்றுமை மயக்கம் கொள்க. கோட்டில்லா (தன)
வினையாலணையும் பெயர். கூதற்கு; வேற்றுமை மயக்கம்.
விண்-ஆகாயம்.
(111)
|
|
|
|
|
|
112. உணவொடுங்கினால்
உயிரொடுங்கும் |
- இறையிறை யின்சந்தித் தென்பொடூன்
சார்த்தி
முறையின் நரம்பெங்கும் யாத்து-நிறைய அவாப்பெய்த பண்டியை
ஊர்கின்ற பாகன் புகாச்சுருக்கில் பூட்டா விடும்.
(பதவுரை)
இறை இறையின் சந்தித்து-உறுப்புக்களின் மூட்டு வாய்களை
ஒன்றோடொன்று பொருத்தி, என்பொடு ஊன்சார்த்தி-எலும்போடு தசையை
இணைத்து, முறையின்-முறையே, நரம்பு எங்கும்
யாத்து-நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி, நிறைய
அவாப் பெய்த பண்டியை-ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை,
ஊர்கின்ற பாகன்-ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன்,
புகாச் சுருக்கில் பூட்டாவிடும்-ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச்
செலுத்துதலைவிட்டு நீக்குவான்.
(குறிப்பு) ''அன்ன
மொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' என்ற பழமொழியின் பொருளை இங்குக் காண்க.
பூட்டுதல்: பொருத்திச்
செலுத்துதல்.
(112)
|
|
|
|
|
|
- ஆசையும் பாசமும் அன்வும் அகத்தடக்கி
பூசிப்
பொதிந்த புலாலுடம்பு-ஊசல் கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத் தெயிறுற்
றிடைமுரிந்தக் கால்.
(பதவுரை)
ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி-பொருள்கள்மேல் வேட்கையையும்
உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே
அடக்கி, பூசிப்பொதிந்த-தசையால் கட்டிய, புலால்
உடம்பு-புலால் நாற்றம் வீசும் உடம்பானது, கூற்றத்து எயிறு உற்று இடை
முரிந்தக்கால்-எமனது பல்லில் சிக்கி அழிந்தவிடத்து, ஊசல் கயிறு
அற்றால் போலக் கிடக்கும்-கயிறற்றவிடத்து ஊஞ்சலே போல அது செயலற்று
வீழ்ந்து கிடக்கும்.
(குறிப்பு) ஏ:
அசைநிலை. முரிந்தக்கால்: எதிர்கால வினையெச்சம்.
(113)
|
|
|
|
|
|
114. உலகவாழ்க்கை
உறுதியன்று |
- மறந்தொருவன் வாழுமிம் மாயமாம்
வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை--செறிந்தொருவன் ஊற்றம் இறந்துறுதி
கொள்ளாக்கால் ஓகொடிதே கூற்றம் இடைகொடுத்த
நாள்.
(பதவுரை)
ஒருவன் மறந்துவாழும் இம்மாயம் ஆம் வாழ்க்கை- ஒருவன் தனது ஆன்ம
சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கை, ஒருவன் அறிந்து
வாழுமேல் இல்லை-இவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும்;
ஒருவன் செறிந்து ஊற்றம் இறந்து-ஒருவன் மிகவும் பற்றைவிட்டு,
உறுதிகொள்ளாக்கால்-ஞானத்தையடையானாயின், கூற்றம்
இடைகொடுத்த நாள்-அவன் கூற்றினிடம் அகப்படும் ஞான்று, ஓ
கொடிதே-அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.
(குறிப்பு)
அழியுந்தன்மைத்தாய உடம்பு உள்ளபொழுதே அழிவல்லாத ஞானத்தை முயற்சியா
லடையவேண்டுமென்பது கருத்து. ஓ, ஏ: இரக்கப் பொருளன.
(114)
|
|
|
|
|
|
115. இவ்வுலகம்
ஏமாற்றமாகிய மாய வித்தையாம் |
- தோற்றமும் சம்பிரதம் துப்புரவுஞ்
சம்பிரதம்
கூற்றமும் கொள்ளுங்கால்
சம்பிரதம்--தோற்றம் கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார்
துஞ்சார் படைப்பட்ட நாயகனே போன்று
(பதவுரை)
தோற்றமும் சம்பிரதம்-பிறப்பும் சித்தே, துப்புரவும்
சம்பிரதம்-பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் சித்தே,
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்-உலகில் வாழும் உயிர்களை எமன்
கவர்ந்துபோதலும் சித்தே, கற்று அறிந்தார்-அற நூல்களை
ஓதியுணர்ந்தவர்கள், தோற்றம் கடைப்பட்டவா றறிந்து-பிறப்பின்
இழிவை யறிந்து-படைப்பட்ட நாயகனே போன்று-போர் முனையை அடைந்த
சேனாதிபதியேபோல, துஞ்சார்-சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க
முயல்வர்.
(குறிப்பு)
சித்து-வியத்தகு செய்தி; மாயவித்தை. ஏ: அசைநிலை, கடை: இறுதியாகிய
இழிவு. (115)
|
|
|
|
|
|
116. சின்னாள் வாழ்க்கையைத்
தெளியார் |
- தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந்
துயிலும் உறீஇப்--பருவந்து பத்தெட்டு நாளைப் பயனிலா
வாழ்க்கைக்கு வித்துக்குற் றுண்பார் பலர்.
(பதவுரை)
தெரிவு இல் இளமையும்-பொருள்களை ஆராய்தற்கேலாத
இளமைப்பருவத்தையும், தீப்பிணியும்-கொடிய நோய்களையும்,
மூப்பும்-கிழத்தன்மையையும்,
பிரிவும்-உற்றாரைப் பிரிதலையும்,
துயிலும்-மரணத்தால் வருந் துன்பங்களையும்,
உறீஇ-அடைந்து, பருவந்து-வருந்தி,
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு- பயனற்ற சின்னாள்
வாழ்க்கைக்கு, வித்துக்குற்று உண்பார் பலர்-உணவை விரும்பும்
வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய
அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.
(குறிப்பு)
''நனிபேதையே நயனில் கூற்றம்'' என்ற புறநானூற்றுச் செய்யுளில் ''விரகின்மையின்
வித்தட்டுண்டனை'' என்னுந் தொடரை நோக்குக. உறீஇ:
சொல்லிசையளபெடை. (116) |
|
|
|
|
|
117. மதியிலா மாந்தரின்
மயக்கம்
|
- பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந்
நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர்--குறைக்கூடாச் செல்வம் கிளைபொருள்
காமமென் றின்நான்கும் பொல்லாப்
பொறியறுக்கப்பட்டு
(பதவுரை) பிறப்பு
இறப்பு மூப்பு பிணி என்று இந்நான்கும்- பிறப்பு இறப்பு மூப்பு நோய் என்ற
இந்நான்கினையும், மதியிலா மாந்தர் மறப்பர்-அறிவில்லாத மக்கள் மறந்து வாழ்வர்;
(அவர் அவைகளை மறத்தற்குக் காரணமாய) குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்று
இந்நான்கும்-குறையாத செல்வம், சுற்றம், மக்கள், காதன் மனைவி ஆகிய இந்நான்கும்,
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு (போம்)-இடையே தீயூழ்வர ஒழிந்துபோயினும்போம்,
ஆதலால் அறிவுடையார் பிறப்பு முதலியவற்றை மறவார்.
(குறிப்பு)
குறைக்கூடா: விரித்தல் விகாரம். ''குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்றிந்
நான்கும் பொல்லாப் பொறியறுக்கப்பட்டுப் போமென்னும் மதியிலாமாந்தர் பிறப்பிறப்பு
மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர்'' எனக் கொண்டு கூட்டலுமாம். பொருள்-மக்கள்;
''தம்பொரு ளென்பதம் மக்கள்'' என்பதனாற்
கொளக. (117) |
|
|
|
|
|
118. உடற்குறுதி ஒப்பற்ற
தவமே |
- மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு
மெல்லாம் சலமிலவாய்--நோக்கீர் பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு.
(பதவுரை) மூப்பு பிணியே
தலைப்பிரிவு நல்குரல் சாக்காடும் எல்லாம்-மூப்பு நோய் மனைவி மக்களைப்
பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும்,
சலமிலவாய் நோக்கீர்-பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர்,
பருந்துக்கு இரை ஆம்-கழுகுகளுக்கு இரை ஆகிய, இவ்
யாக்கையைப் பெற்றால்-இவ்வுடலைப் பெற்றால், மருந்து மறப்பதோ
மாண்பு-இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது
பெருமையாகுமோ? ஆகாது.
(குறிப்பு)
''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ
மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை-உடல்: தொழிலாகுபெயர்.
ஓ:எதிர்மறை வினா. (118) |
|
|
|
|
|
119. மெய்யுணர்வில்லார் மிக
நலிவடைவர் |
- நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு
நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய துன்பத்துள் துன்பம்
உழப்பர் துறந்தெய்தும் இன்பத் தியல்பறி யாதார்.
(பதவுரை) துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்-பற்று விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை
அறியாதவர்கள், நீக்க அருநோய்-தீர்த்தற் கரியநோயும்,
மூப்பு-கிழத்தன்மையும், தலைப்பிரிவு-மனைவி
மக்களைப் பிரிதலும், நல்குரவு-வறுமையும்,
சாக்கடு-மரணமும், என்ற ஐந்து களிறு உழக்க-ஆகிய
ஐந்து யானைகளும் வருத்த, போக்க அரிய துன்பத்துள் துன்பம்
உழப்பர்-நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை
யனுபவிப்பார்கள்.
(குறிப்பு)
''களிறு உழக்க'' என்பது குற்றுகரப் புணர்ச்சி. சாக்காடு: தொழிற்பெயர்;
காடு, தொழிற்பெயர் விகுதி. (119) |
|
|
|
|
|
120. இறத்தல் உறுதி :
துறத்தல் பெறுதி ! |
- எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப்
புக்கில்
நிறையத் தருகிலேன்--மிக்க அறிவனை வாழ்த்தி அடவி துணையாத் துறத்தன்மேற்
சார்தல் தலை.
(பதவுரை) (நெஞ்சே)
எக்காலும் சாதல் ஒருதலையே - எப்பொழுதாவது இறப்பது உறுதி,
யான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன்-நான் உனக்கு அழியும்
தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டிரேன், மிக்க அறிவினை
வாழ்த்தி-உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து, அடவி
துணையா-வனத்தைத் துணையாகக் கருதியடைந்து, துறத்தல்மேற் சார்தல்
தலை-துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.
(குறிப்பு)
புகு+இல்=புக்கில்: உயிர்புகும் வீடு: உடல், துணையா: ஈறு கெட்ட
செயவென்வாய்பாட்டு வினையெச்சம். ஒரு தலை-உறுதி; ஒரு சொன்னீர்மைத்து. (120)
|
|
|
|
|
|