131 முதல் 140 வரை
|
|
131. உடலினைமட்டும் ஓம்பலாற்
பயனில்லை |
- புகாஉண்பார் அல்லுண்ணார் போகுந்
துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும்--அவாவினைப் பற்றுச்செய் தென்னை
பயமின்றால் நன்னெஞ்சே! ஒற்றி உடம்போம்
புதற்கு
(பதவுரை)
நன்னெஞ்சே-எனது நல்ல நெஞ்சமே!, புகா
உண்பார்-பகலில் சோறுண்டாரும், அல்லுண்ணார் -இரவில்
சோறுண்ணவிராது மாய்வர், போகுந் துணைக்கண் -உயிர்
நீங்குங்காலத்தில், தவாவினை-தவறாது ஒருவன் செய்த வினையே (அவனை)
வந்தடையக் கண்டும்-வந்து சேர்வதை அறிஞர்வாய்க் கேட்டுணர்ந்தும்,
ஒற்றி உடம்போம்புதற்கு - உடைமையல்லாத இவ் வுடம்பினைப்
பாதுகாத்தற்கு, அவாவினைப் பற்றுச் செய்தென்னை-பொருள்களிடத்து
ஆசை கொள்ளுதலால் விளைவதென்னை?, பயமின்று - யாதொரு
பயனுமில்லை.
(குறிப்பு) தவா:
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஆல்: அசைநிலை. ஒற்றி - அடைமானமாய்க்
கொண்டுள்ளபொருள். (131) |
|
|
|
|
|
132. மூப்பு இறப்புகளின்
கொடுமை |
- புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு
நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய்--விழுத்துமிழ்ந்(து) இன்ன நடையாய்
இறக்கும் வகையினை நன்னெஞ்சே! நாடாய்காண்
நற்கு
(பதவுரை)
புழுப்போல் உவர்ப்பு ஊறி - புழுக்கள்போல் வெறுக்கத் தக்க
குணங்களும் மிகுதலால், பொல்லாங்கு நாறும்-தீமைகள்
பிறப்பதற்கிடமாக இருக்கின்ற, அழுக்கு உடம்பு தன்னுள்-தூயதல்லாத
உடம்பினிடத்தே, நல்நெஞ்சே-நல்ல மனமே!
வளர்ந்தாய்-நீ வளரா நிற்கின்றாய், விழுத்து
உமிழ்ந்து-நீ வளரும் உடம்பு படுக்கையிடை வீழ்ந்து கோழையைக் கக்கி
உமிழ்ந்து, இன்ன நடையாய் இறக்கும் வகையினை-இவைபோன்ற பிற
ஒழுக்கத்தோடும் இறக்கு மென்பதனை, நற்கு நாடாய்-நன்கு
ஆராய்ந்தறிந்து அதன்மீதுள்ள பற்றினை விடுவாயாக.
(குறிப்பு)
'விழுத்து' என்பது விழுந்து என்பதன் விகாரம். நன்கு நற்கு என்றாயது. ''மென்றொடர்
மொழியிற் சில வேற்றுமையில் தம்மின வன்றொடர்.'' என்ற விதியாலாம். காண்:
முன்னிலையசை. (132) |
|
|
|
|
|
133. ஒழுக்கமிலாதான்
உயிர்விடுதல் நன்று |
- ஒழுக்க மிலனாகி ஓர்த்துடைய னேனும்*
புழுப்பொதிந்த
புண்ணிற் கொடிதாம்--கழுக்கிரையை ஓம்பின்மற் றென்னை உறுதிக்கண்
நில்லாக்கால் தேம்பி விடுதலே நன்று.
-
- *ஓர்த்துடைய யென்னும்.
(பதவுரை)
ஓர்த்து உடையனேனும் - அறிவு நூல்களை ஆராய்ந்துணர்ந்த அறிவினனே
யெனினும்,புழுப்பொதிந்த-புழுக்கள் நிறைந்த,
புண்ணிற்கொடிதாம் கழுக்கிரையை-புண்ணினுங் கொடியதும் கழுகுகளுக்
கிரையாவதுமாகிய உடலை, ஒழுக்கமிலனாகி ஓம்பின் - தீயொழுக்கத்தை
மேற்கொண்டு வளர்த்து வருவானாயின், மற்று என்னை-அவன் அவ்
வறிவாலடையும் பயன் யாது?, உறுதிக் கண்
நில்லாக்கால்-நன்னெறிக்கண் நில்லாதவிடத்து, தேம்பி விடுதலே
நன்று-அவன் அழிந்துவிடுதலே நல்லது.
(குறிப்பு)
கழுகுக்கிரை என்பது கழுக்கிரை எனக்குறைந்தது. கழுகுக்குன்றம் என்பது கழுக்குன்றம்
எனவருதல் போல. (133) |
|
|
|
|
|
134. உண்மைப் பெரியார் உலக
வாழ்க்கையை வெறுப்பர் |
- முடையுடை அங்கணம் நாடோறும் உண்ட
கடைமுறைவாய்
போதரக் கண்டுந்--தடுமாற்றில் சாவாப் பிறவாஇச் சம்பிரத
வாழ்க்கைக்கு மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.
(பதவுரை)
முடை யுடை-அழுகல் நாற்றத் தினையுடைய,
அங்கணம்-சாக்கடையினைப்போன்று,
நாடோறும்-தினந்தோறும், உண்ட-சாபிட்ட உணவுப்
பொருள்கள், கடைமுறை-இழிவான நிலையில், வாய்
- எருவாய் முதலியவற்றின் வழியாக, போதர - வெளி வருதலைச் செய்ய,
கண்டும்-பார்த்திருந்தும், தடுமாறு இல்-(மக்கள்)
மனமயக்கத்தினாலே, சாவா-செத்தும்,
-பிறவா-பிறந்தும்(வாழுகின்ற) இச் சம்பிரத
வாழ்க்கைக்கு - இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே,
மெய்கண்டார் - உண்மைப்பொருளையுணர்ந்த பெரியோர்களின்,
நெஞ்சு - மனம்,
மேவாதாம்-பொருந்தாததாகும்.
(குறிப்பு) இல்:
ஐந்தனுருபு; ஏதுப்பொருளானது. சாவா, பிறவா, செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சங்கள். வாழ்க்கைக்கு: வேற்றுமை மயக்கம்.
(134) |
|
|
|
|
|
- வயிறு நிறைக்குமேல் வாவின்மிக்
கூறிச்
செயிரிடைப்பா டெய்துமாஞ் சீவன்--வயிறுமோர் பெற்றியால் ஆர்த்திப்
பெரும்பயன் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்.
(பதவுரை)
வயிறு நிறைக்குமேல் - உணவால் வயிறு நிறைக்கப்படுமாயின்,
சீவன்-உயிர், வாவின் மிக்கு ஊறி-மிக்கு
அவாவினை யடைந்து, செயிரிடைப் பாடு எய்தும்-தீவினைகளிடைக்
கேட்டினை யடையும் (ஆதலால்), வயிறும்-வயிற்றையும், ஓர்
பெற்றியால் ஆர்த்தி-கரணங்கள் தொழிற்கு உரியனவாகுமாறு சிறிது உண்பித்து,
பெரும்பயன் கொள்வதே-இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்கு ஏதுவாகிய
காரியங்களைச் செய்து பெரும்பயன் கொள்வதே, கற்று அறிந்த மாந்தர்
கடன்-அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.
(குறிப்பு)
வாவின்: தலைக்குறை. இடை: ஏழனுருபு. ஏ: தேற்றம்.
(135) |
|
|
|
|
|
- புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து
நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் புலங்கள் ஒறுக்கும் பருவத் துசாத்துணையும்
ஆகா வெறுத்துநீ உண்டல் கடன்
(பதவுரை)
நெஞ்சே-மனமே!, பொச்சாந்து புலன்கள்
பொருட்டாக-மேல் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் நுகரப்படும்
இன்பத்தின் பொருட்டு, சலங்களை சாராவொழுகல்-தீவினைகளை
மேற்கொண்டு ஒழுகாதே, ஒறுக்கும் பருவத்து-அத் தீவினைகளை உன்னை
ஒறுக்கும்பொழுது, புலன்கள் உசாத்துணையும் ஆகா-அப் பொறிக ளைந்தும்
உனக்கு மதி கூறுவதற்கேற்ற துணையுமாகா, (ஆதலால்) நீ வெறுத்து உண்டல்
கடன்-புலனுகர்ச்சி கருதி மீதூணை விரும்பாது மறுத்துண்டல்
கடனாகும்.
(குறிப்பு)
ஒழுகல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. உண்டல்: தொழிற்பெயர். புலன்:
பின்னது தானியாகுபெயர். (136) |
|
|
|
|
|
- புகாப்பெருக ஊட்டிற் புலன்கண்மிக் கூறி
அவாப்பெருகி
அற்றந் தருமால்--புகாவுமோர் பெற்றியா னூட்டிப் பெரும்பயன்
கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்.
(பதவுரை)
புகாப் பெருக ஊட்டின் - வயிற்றினுக்கு மிக்க உணவை ஊட்டினால்,
புலன்கள் மிக்க ஊறி-ஐம்பொறிகளும் அடங்காது எழுதலால்,
அவாப் பெருகி-ஆசையானது வளர்ந்து, அற்றம் தரும்
- அழிவினைப் பயக்கும்; (ஆதலால்) புகாவும்-உணவையும்,
ஓர்பெற்றியான் ஊட்டி-கரணங்கள் தொழிற்படுதற்கேற்ற நிலையில்
சிறிதளவு வயிற்றினுக்கு ஊட்டி பெரும்பயன் கொள்வதே இவ்வுடம்பால் வீடுபேற்றினுக்குரிய
காரியங்களைச்செய்துகொள்வதே, கற்று அறிந்த மாந்தர் கடன்-அறிவு
நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.
(குறிப்பு)
புலன்:தானியாகு பெயர். ஆல்: அசை. ஏ: தேற்றம் .
(137) |
|
|
|
|
|
138. பேராசையினை அடக்கலே
பிறரை யடக்கலாம் |
- ஒறுக்கிலேன் ஊர்பசை என் கண் பிறரை
ஒறுக்கிற்பேன்
என்றுரைப்பை யாகில்-கறுத்தெறிந்த கற்கறித்துக் கற்கொண் டெறிந்தாரைக்
காய்கல்லாப் பற்கழல்நாய் அன்ன துடைத்து.
(பதவுரை)
என் கண் ஊர் பசை ஒறுக்கிலேன் பிறரை ஒறுக்கிற்பேன் என்று
உரைப்பாயாகில் - என்னை யூர்ந்து செலுத்துகின்ற அவாவினையடக்கேன், நான்
கருதிய பொருளையடைதற்கு இடையூறு செய்கின்றவர்களை அடக்குவேன் என்று நெஞ்சே! நீ
சொல்வாயாயின்; கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லா - கல்லால்
தன்னை எறிந்தவர்களை வெகுண்டு கடியாமல், கறுத்து எறிந்த கல்
கறித்து-அவர்களால் வெகுண்டு எறியப்பட்ட கல்லைக் கடித்து, பல்
கழல் நாய் அன்னது உடைத்து - பல்லை இழக்கின்ற நாயினது செயலை ஒக்கும் உனது
செயல்.
(குறிப்பு)
ஊர்பசை: வினைத்தொகை. காய்கல்லா:ஈறுகெட்ட எதிர்மரை வினையெச்சம்.
(138) |
|
|
|
|
|
139. பெரியாரைத்
துணைக்கோடல் |
- உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலனைந்துங் காப்பமைத்து-வெள்ளப் பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத்
தாரைத் துறவித் துணைபெற்றக் கால்.
(பதவுரை)
துறவிப் பெருங் குணத்தாரைத் துணை பெற்றக்கால்-துறவியாகிய சிறந்த
குணமுடயவரை ஒருவர் தமக்குத் துணைவராகப் பெறுவாராயின், உள்ளப் பெருங்குதிரை
ஊர்ந்து-அவர் தமது மனமாகிய சிறந்த குதிரையின் மீதேறி,
வயப்படுத்தி-அதைத் தம் வயப்படுத்தி, கள்ளப் புலனைந்துங்
காப்பமைத்து-தம்மை வஞ்சிக்கின்ற புலன் களைந்தையும் நுகருதற்குப்
பொறிகளின் வழியே அது புறத்தே செல்லுதலைத் தடுத்து, வெள்ளப் பிறவிக் கண்
நீத்தார் - வெள்ளமென்னும் எண்ணினது அளவைக் கொண்ட மிகப் பல
பிறவிகளையும் கடந்து வீடுபேற்றினை யடைந்தவராவர்.
(குறிப்பு)
பெற்றக்கால்: எதிர்கால வினையெச்சம். நீத்தார்: தெளிவின்கண் வந்த காலவழுவமைதி.
(139) |
|
|
|
|
|
140. மனத்தினை
யடக்கியாளல் |
- பரிந்தெனக்கோர் தம்மை பயப்பாய்போல்
நெஞ்சே!
அரிந்தென்னை ஆற்றவுந் தின்னல்--புரிந்துநீ வேண்டுவ வேண்டுவேன்
அல்லேன் விழுக்குணம் பூண்டேன் பொறியிலி போ.
(பதவுரை)
நெஞ்சே-மனமே!, பரிந்து எனக்கு ஓர் நன்மை
பயப்பாய்போல்-எனக்கு ஓர் உறுதியை விரும்பிச் செய்வதுபோற் காட்டி,
என்னை ஆற்றவும் அரிந்து தின்னல்-என்னை மிகவும் அரிந்து
தின்னாதே, நீ புரிந்து வேண்டுவ வேண்டுவேன் அல்லேன்-நீ விரும்பி
அடையக் கருதுகின்றவற்றை நான் விரும்பிச் செய்வேனல் லேன், விழுக்குணம்
பூண்டேன்-பற்று விடுதலை மேற்கொண்டுள்ளேன்;
பொறியிலி-பேதையே!,
போ-அப்பாற்செல்.
(குறிப்பு)
தின்னல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. பொறியிலி: அண்மைவிளி.
வேண்டுவ: வினையாலணையும் பெயர்.
(140) |
|
|
|
|
|