181 முதல் 190 வரை
|
|
181. தன்னைப் போற்றுவதும்
தனிப்பெரும் ஈகையே |
- சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப்
பாகன்மற்(று)
ஈரப் படினும் அதுவூரான்--ஆரக் கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும்
அதனால் முடிக்கும் கருமம் பல.
(பதவுரை)
சோற்றூர்திப் பாகன் சோராப் பசிக்குமேல் ஈரப்படினும் அது
ஊரான்-உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன்
மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான், அதனால்
முடிக்கும் கருமம் பல-அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல
இருப்பதால், ஆரக் கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்-அவ்வுடலைத்
தொழிற்படுத்தற் கேற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல்
வேண்டும்.
(குறிப்பு)
சோர-சோரும்படி: வினையெச்சம். சோர்தல்-தளர்தல். சோற்றூர்தி-உடல். மற்று:
அசைநிலை. (181) |
|
|
|
|
|
182. ஈகையைப்போன்று
மறுமைக்கேற்றது எதுவுமில்லை |
- ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங்
கொள்ளாத வாறெண்ணி--மேவரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து
தம்முடமை பற்று விடுதல் இலர்.
(பதவுரை)
தம் உடைமை உலகத்தில் யாவரும் கொள்ளாதவாறு - தமது பொருளை
உலகில் மற்றை யாவரும் கவரா வண்ணம் காக்கவல்லதும், மேவ அரிய மற்றுடம்பு
கொள்ளும் பொழுது-அப் பொருளை அடைதற்கரிய மறுபிறவியைத் தாம்
அடையுங்காலத்தும் அதனைத் தம்பால் அடைவிக்க வல்லதும், எண்ணி
ஓர்ந்து-அறமே என்பதனை ஆராய்ந்தறிந்து, பற்றுவிடுதல்
இலர்-அப் பொருளின்கண் வைத்த பற்று நீங்காராய் ஈதலால்,
ஈவாரின் உலோபர் இல்லை-இரப்பவருக்கு அவர் வேண்டுவதை ஈவார்
போன்ற கடும் பற்றுள்ளம் உடையார் வேறு இலர்.
(குறிப்பு)
மேலரிய: அகரந்தொக்கது. எண்ணி ஓர்ந்து என்ற வினை யெச்சங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு
ஆராய்ந்தறிந்து எனப்பொருள்பட்டன. ஈகையின் சிறப்பினை உயர்த்துக் கூறுவான்,“ஈவாரின்
உலோபர் இலர்” என்றார். (182) |
|
|
|
|
|
183. உலோபி தடியடிக்
குதவுவன் |
- இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட
வழங்காத பான்மையார்--நட்ட சுரிகையாற் கானும் சுலாக்கோலாற்
கானும் சொரிவதாம் ஆபோற் சுரந்து.
(பதவுரை)
பட்ட-தம்பால் உள்ள பொருள்களை, ஈண்டும் இட்டக்
கடைத்தரார்-நெருங்கிய நட்பினர்களுக்கும் கொடாமலும், பலிமரீஇ
வழங்காத பான்மையார்-பிச்சை யேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் உலோப
குணமுடையார், நட்ட சுரிகையாற்கானும்-உடைவாளால் தம்மைத் தாக்க
வருபவனுக்கும், சுலாக்கோலாற்கானும்- தடியைச் சுழற்றிக்கொண்டு
அடிக்க வருபவனுக்கும், ஆபோல் சுரந்து சொரிவது ஆம்-பசு
கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல்
உண்டாகும்.
(குறிப்பு)
சுரிகையாற்கானும், சுலாக்கோலாற்கானும் என்பதிலுள்ள ‘ஆன்’ இரண்டும் சாரியைகள்.
மரீஇ: சொல்லிசையளபெடை. (183) |
|
|
|
|
|
184. அறிவுப்பொருளை ஈதலும்
பெறுதலும் |
- கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான்
குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின்--அடுத்தடுத்துச் சென்றாங் கடைந்து
களைவினை யென்பரே வென்றார் விளங்க விரித்து.
(பதவுரை)
கொடுப்பான்பசை சார்ந்து கொள்வான் குணத்தில் கொடுக்கப் படுதல்
அமையின்-ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப
உபதேசிக்க வல்லவனாதல் அமையின், அடுத்தடுத்துச் சென்று ஆங்கு
அடைந்து-பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு,
களைவினை என்பரே வென்றார் விளங்க விரித்து-‘பிறவிக்குக்
காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணறுமாறு
விரித்துக் கூறுவர்.
(குறிப்பு)
‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான்
கொள்வான் என்பன ஆசிரியனை யும் மாணக்கனையும் முறையே உணர்த்தி நின்றன.
அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். பன்மைப் பொருள் தந்துநின்றது.
(184) |
|
|
|
|
|
185. ஈதலும் ஏற்றலும்
இல்லெனில், யாதும் இல்லையாம் |
- கொடுப்பான் வினையல்லன் கொள்வானும்
அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால்--அடுத்தடுத்து நல்லவை யாதாங்கொல்
நாடி யுரையாய்நீ நல்லவர் நாப்பண் நயந்து.
(பதவுரை)
கொடுப்பான்-இவ்வுலகத்திலே கொடுக்குங் கொடையாளி, வினை
யல்லன்-கொடுக்குஞ் செயலை மேற்கொள்ளாதவனாயும்,
கொள்வான்-கொள்பவனாகிய இரவலன்,
அல்லன்-அல்லாமல் யாவரும் செல்வராயும், கொடுக்கப்படும்
பொருளும்-வழங்குவதற்குரிய பொருளும்,
அன்றால்-வழங்குதற்கல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால்;
நாப்பண்-சன்றோர்களிடையே,
அடுத்தடுத்து-அடிக்கடி(ஏற்படவேண்டிய),
நல்லவை-நற்காரியங்கள், யாது ஆம்-எங்ஙனம்
ஏற்படும் (என்பதை), நீ நயந்து-நீ உலக நன்மையை விரும்பியவனாய்,
நாடி-ஆலோசித்து,
உரையாய்-சொல்வாயாக.
(குறிப்பு)
புரவலரும் இரவலருமின்றி உலகமிருக்குமானால் நல்வினைக்கே இடனின்றி யாவும்
நிலைத்திணைப்பொருளாய் நிற்குமென இங்கு நினைப்பூட்டலாயினர். ‘கொடுக்கப்படு
பொருளுமன்றால்’ என்ற பாடபேதம் திருவாளர் செல்வக்கேசவராய முதலியார் கண்டதாம்.
இதனைத் தமிழ்ச் செல்வம் என்ற நீதிநூற்றொகையாலும் காணலாம்.
(185) |
|
|
|
|
|
- அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம்
நீக்கிப்
பொறியைந்தும் வெல்லும்வாய் போற்றிச்--செறிவினான் மன்னுயி
ரோம்புந் தகைத்தேகாண் நன்ஞானந் தன்னை உயக்கொள்
வது.
(பதவுரை)
நன்ஞானம் தன்னை உயக்கொள்வது-நன்ஞானம் தன்னை யுடையவனுக்கு
உய்யும் நெறியை யருளுவதாவது, அறிவு மிகப் பெருக்கி-அறிவினை மிகப்
பெருகுமாறு செய்து, ஆங்காரம் நீக்கி-ஆங்காரத்தினைப் போக்கி,
பொறியைந்தும் வெல்லும் வாய்போற்றி-ஐம்பொறிகளையும் வெல்லும்
வழியினை வளர்த்து, செறிவினான்-அடக்கத்தோடு,மன்னுயிர்
ஓம்பும் தகைத்து-நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகாவகை காக்கும் தன்மையை
உடையனாக்குவதேயாகும்.
(குறிப்பு) காண்:
முன்னிலை அசை. வாய்-வழி. ஏ: அசை நிலை. தகைத்து: ஒன்றன்பாற் குறிப்பு
வினைமுற்று.(186) |
|
|
|
|
|
187. செயற்கரிய செய்வதே
சிறப்பாம் |
- சோறியாறும் உண்ணாரோ? சொல்லியாருஞ்
சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ?--தேறி உரியதோர் ஞானங்கற்
றுள்ளந் திருத்தி அரிய துணிவதாம் மாண்பு.
(பதவுரை)
சோறு யாறும் உண்ணாரோ, சொல்யாரும் சொல்லாரோ, ஏறு யாரும் வையத்துள்
ஏறாரோ-சோறு உண்ணுதலையும், அரியன செய்வேனென்று சொல்லுதலையும்,
ஊர்திகளில் ஏறிச் செல்லுதலையும் உலகத்துள் எல்லாரும் செய்வர், உரியதோர்
ஞானங்கற்றுத் தேறி-கற்றற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து,
உள்ளந்திருத்தி-மனமாசறுத்து, அரிய துணிவதாம்
மாண்பு-செயற்கரியன செய்து வீடுபேற்றினையடையக் கருதுவதே
பெருமையாகும்.
(குறிப்பு)
சோறு+யாரும்=சோறியாரும், இகரம் குற்றியலிகரம். ஏறு: ஏறப்படுவது. அரிய: அன்சாரியை
பெறாத பலவின்பால் வினையாலணையும் பெயர்.
(187) |
|
|
|
|
|
188. ஒரே பொருள்
இடவேறுபாட்டால் உயர்வும் தாழ்வும் |
- பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு
தெண்ணீர் அமுதமாம்--ஓம்பற்(கு) ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம்
அதுபோற் களியாம் கடையாயார் மாட்டு.
(பதவுரை)
பாம்பு உண்ட நீரெல்லாம் நஞ்சு ஆம்(அது போல்)-பாம்புகள் பருகிய
நீரனைத்தும் நஞ்சாக மாறுதல் போல, கடையாயார் மாட்டு ஞானம்
களியாம்-கயவர்கள்கற்கும் ஞானநூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே
விளைவிக்கும்; பசு உண்ட தெண்ணீர் தேம்படு அமுதம் ஆம்
அதுபோல்-பசுக்கள் பருகிய தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல்போல,
உயர்ந்தார்கண் ஞானம் ஓம்தற்கு ஒளியாம்-உயர்ந்தோர்கள் கற்கும்
ஞான நூல்கள் அவர் மாட்டுப் போற்றுதற்குரிய அறிவினை
வளர்க்கும்.
(குறிப்பு) களி-களிப்பைத் தருவது; மயக்கம்.
தேம்-இனிமை; நல்ல சுவை படுதல்-பொருந்துதல், ''அதுபோல'' என்பதனை ஈரிடத்தும்
கூட்டுக.(188) |
|
|
|
|
|
189. ஞான நூல்களின்
ஆராய்ச்சி எப்பொழுதும் வேண்டும் |
- கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவது
அருளே--அடுத்தடுத்து உண்ணப் படுவது நன்ஞானம் எப்பொழுதும் எண்ணப் படுவது
வீடு.
(பதவுரை)
நாளும் கெடுக்கப்படுவது தீக்கருமம்-எக்காலத்தும் அழிக்கப்படு வது
தீவினையே, கொடுக்கப்படுவது அருளே-பிறர் பால் செய்தற்குரியது
அருளே, அடுத்தடுத்து உண்ணப் படுவது நன் ஞானம்-பலமுறையும் ஆராய்ந்து
இன்புறுதற் குரியது நல்ல ஞான நூலே, எப்பொழுதும் எண்ணப்படுவது
வீடு-எஞ்ஞான்றும் மனத்தால் நினைக்கப்படுவது வீடுபேறேயாம்.
(குறிப்பு)
வீடு-விடப்படுவது: முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடுத்தடுத்து: அடுக்குத்தொடர்.
(189) |
|
|
|
|
|
190. வீட்டுலகடைய வேண்டுவோர்
இயல்பு |
- இந்தியக் குஞ்சரத்தை ஞான
இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே--பந்திப்பர் இம்மைப்
புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்து
வார்.
(பதவுரை)
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்
படுத்துவார்-இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருது
கின்றவர்கள், இந்தியக் குஞ்சரத்தைச் சிந்தனைத் தூண் பூட்டிச்
சேர்த்தியே-இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து
(விலகாவகை) ஞான இருங் கயிற்றால் பந்திப்பர்-ஞானமென்னும்
வலியகயிற்றால் இறுகக் கட்டுவர்.
(குறிப்பு)
இந்தியம்-இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு,
தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது.
(190) |
|
|
|
|
|