(பொ-ள்.) இன்சொல்லன் - இனிய சொற்களையுடையவனும், தாழ் நடையன் - அடங்கிய ஒழுக்கமுடையவனும்,ஆயினும்-ஆனாலும், ஒன்று இல்லானேல் - அவன் சிறிதும் பொருள் இல்லாதவறியவனானால், கடல் ஞாலம் - கடலாற் சூழப்பட்ட உலகம். வன்சொல்லின் அல்லது-கடுஞ்சொற்கொண்டு பேசுதலல்லாது, வாய் திறவா - இன்சொற்கொண்டு பேசாவாம், என்சொல்லினும் - யாதுதான் சொன்னாலும், கைத்து உடையான் கால்கீழ் ஒதுங்கும் - செல்வமுடையவன்காலின் கீழே அடங்கும். (ஆதலால் இவ்வுலக நிலைகள்) பித்து உடைய - பேதுறவேஉடையன, அல்ல பிற - நல்லறிவு உடையன அல்ல. (வி-ம்.) பிறர் மகிழும்படி தீங்குபயவாத வகையிற்பேசும் பேச்சு இன்சொல், தாழ்நடை - அடக்கியஒழுக்கம். ஒன்று - சிறிது என்னும் பொருளில் வந்தது: இழிவு சிறப்பும்மை விரித்துக்கொள்க. வன்சொல்லினல்லது வாய்திறவா என்றது, உலகம் வன்சொல் சொல்லுதற்குவாய்திறக்குமேயன்றி வேறு இன்சொல் சொல்வதற்கு வாய்திறவா என்றற்கு. கைத்து -கையிலிருப்பது; தன்மைத்து என்பதுபோல; அது பொருளை உணர்த்திற்று. என்-இங்குத் தாழ்ந்ததைத்குறித்தது. ஞாலம், அதன்கண் உள்ள மக்களுயிர்களை உணர்த்தி ஆகுபெயராய்நின்றது, ஞாலம் என்னுஞ் சொல்லின் அஃறிணை பற்றித் திறவா, ஒதுங்கும், உடைய அல்ல, பிறஎன்பன வெல்லாம் பலவின் பாலாகவே வந்தன. பித்து - நல்லதன் நன்மையும் தீயதன்தீமையும் பிரித்துணராமை. (க-து.) செல்வர், நற்குண நற்செய்கைகள் இல்லாதவராயினும் உலகம் அவர்க்கு அடங்கிநடக்கும். (11) |