16. தாழ்ந்தாரிடந் தாழ்தல்

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமுந்
தலைவணங்கித் தாழப் பெரின்

(பொ-ள்.) இல்லார்- கல்வியும்செல்வமும்இல்லாதவர்கள், குறையிரந்து தம்முன்னர்நிற்ப போல் -அவ்விரண்டையும் வேண்டி அவ்விரண்டுடைய தமக்கு முன்னால் நிற்பதுபோல, தாமும் தலைவணங்கித்தாழப் பெறின் - தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்கப் பெற்றால்; கல்வியுடைமைபொருளுடைமை என்று இரண்டு செல்வமும்செல்வம் எனப்படும்- தாங்கள்பெற்றகல்விச்செல்வம்பொருட்செல்வம்என்னும்- இரண்டு செல்வங்களும் உண்மைச் செல்வங்களென்றுஉயர்ந்தோராற் பாராட்டப்படும்.

(வி-ம்.) உடைமை என்பதைத்தொழிலாகு பெயராகக்கொண்டு செல்வம்என்று உரைக்க, அவ்வாற்றால்,கல்வியுடைமை என்பது கல்வியாகிய உடைமை எனப்பொருளாம். இது பண்புத்தொகை நிலைத்தொடர்.இவ்வாறுரைக்க அறியாதார்உடைமை இரண்டுங் குறிப்புத் தொழிற் பெயரெனக் கொண்டு பொருள்மயக்கஞ் செய்வர். செல்வத்தாற் கல்வியும் கல்வியாற் செல்வமும் ஒன்றுக்கொன்று துணையாய்நின்று ஓங்கிப்பொலியுமாதலின், இவ்விரண்டும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம் என்பது கருத்து.இதற்குமுன் வந்த 10, 11 ஆம் செய்யுட்களாலும் இது விளங்கும். பொருளுடைமையால் விளையுஞ்செருக்கெழுச்சியைக் கல்வி யுடைமை தாழச் செய்யுமாதலின், `தாழப்பெறின்’ என்றார். பொருட்செல்வத்தை உண்மைப் பொருட் செல்வமாக்குவது கல்வியுடைமையாதலால் அதனை முற்கூறினார்.அன்றியும், இல்லையென்று வருவாரை இன்சொன் மொழிந்து தாழ்ந்து எதிரழைப்பது முன்னும், பொருள்தருவது பின்னுமால் நிகழ்தலாய், அம்முறையே தாழ்மை பயக்குங் கல்வியுடைமை, ஈகை பயக்குஞ்செல்வமுடைமைக்கு முன்னின்றது என்றலுமாம். இங்ஙனம் ஈகையுமான பயன்களைப் பெற்றபொழுதேகல்வியுடைமையும் செல்வமுடைமையும் உண்மைச் செல்வங்களெனப்படும் என்றதற்குச் `செல்வமுஞ்செல்வமெனப்படும், எனப்பட்டது. “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்,பூரியார் கண்ணும் உள”* என்னுந் திருவள்ளுவர் கருத்தும் இது. தாழ்தலையுடையவர் கொடையுடையராயிருப்பவராதலால், தாழப்பெறின் என்பதனோடு நின்றது. தலைவணங்கித் தாழப்பெறின் என்றார்.கல்வியுடைமை செல்வமுடைமை என்னும் இரண்டாலும் விளைவதாம் செருக்கை அவ்வப்போதுஅடக்கிக்கொண்டே வரல் வேண்டுமென்பதற்கு, “பெறின்” என்றார், தாழ்தலின் அருமையும்பெருமையுந் தோன்ற, “கீழோ ராயினுந் தாழவுரை”* என்னும் முதுமொழி இங்குக் கருதுதற்குரியது.இனிக் கல்வியுஞ் செல்வமும் தனித்தனி உடையார்க்கும் இச் செய்யுட் கருத்துப் பொருந்தும்,நிற்ப நிற்பது என்பதன் ஈறு   தொகுத்தல்.

(க-து.) கல்வியும் செல்வமும் உடையார்க்கு அழகாவது அவையில்லாதாரிடத்துந் தாழ்மையோடிருத்தலாகும். (16)
__________________________________

*    திருக்-அருளுடைமை,1.

*    கொன்றைவேந்தன, 7.