(பொ-ள்.) புலப்பகையை - ஐந்துபுலன்களாகிய பகையையும், வென்றனம் - வென்றுவிட்டோம்; நல்ஒழுக்கில் -நல்லொழுக்கத்தில் நின்றேம் என்று-தவறாமல் நின்றோமென்று, தம்பாடு - தம்பெருமையை,தம்மில் கொளின்-தமக்குள் கருதிக்கொள்வாராயின், விலக்கிய- செய்யத் தகாதவென்றுவிலக்கப் பட்ட செயல்களை, ஓம்பி - செய்யாமற் காத்து, விதித்தனவே-செய்யத் தக்கவையென்றுவரையறுக்கப்பட்டவற்றையே, செய்யும் - செய்தற்கரிய, நலத்தகையார்- நன்மையாகியதன்மையுடையாரது, நல்வினையும் - நல்ல செயலும், தீதே - பயனற்றதேயாகும். (வி-ம்.) ஓம்பி- பேணி,விலக்கிய , விதித்தன: பலவின்பால் வினையாலணையும் பெயர்கள். ஐம்புலன்கள்,சுவையொளியூறோசை நாற்றம் என்பன. இவை மனத்தை முத்தி வழியிற் போகவிடாதுதடுத்தலின்,புலப்பகை என்றார். ஏ இரண்டில் முன்னது பிரிநிலை, பின்னது தேற்றம். ஒழுக்கு:முதனிலை திரிந்த தொழிற்பெயர். பிற: அசை; நல்வினையும்: உம்மை உயர்வு சிறப்பு. வென்றனம்நின்றோம்: தன்மைப் பன்மை, வினைமுற்றுக்கள்: அம் ஏம் என்பன விகுதி. (க-து.) ஐம்புலன்களையும்வென்ற நல்லொழுக்கமுடையாரும் தற்புகழ்ச்சி கொள்ளல்தீது. (18) |