(பொ-ள்.) குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்கு-குடிமக்களை வருத்திவருத்தி வாங்கும் அரசனுக்கு. கன்றுஆமடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றையுடைய ஆவின் மடியினை வருத்திப்பால் கறப்பதும் நல்ல செயலாகும்; (இவ்வாறு வருத்தி வரி வாங்கும் அரசனிடத்தில்செல்வம் சேர்ந்திருக்கிறதோ வெனில் அதுவுமில்லை.ஆனால்.) குடி ஓம்பிக் கொள்ளுமாகொள்வோர்க்கு-குடிமக்களை அவர்கள் நலத்தில் கருத்து வைத்துப் பாதுகாத்து நல்ல முறையில்வாங்கும் (வகையாக வரியினை வாங்கும்) அரசர்க்கு, மா நிதியம் வெள்ளத்தின் மேலும் பலகாண்டும் - பெருமையுடைய பணம் வெள்ளத்தினும் மேலும் பலவாகக்காண்கின்றோம். (வி-ம்.) கொன்று என்றது, இங்குவருத்ததுலுக்கு வந்தது. அது கொலை செய்தது போன்ற அத்துணை மிகுதியான வருத்தத்தைச் செய்தலாம்.மடி கொன்று என்றதற்கும் அதுவே கருத்து. மடியைக் கொல்லுதலாவது அதனைக் கசக்கி உயிரோடுதோலுரிப்பதே போல அதன் முலைக்காம்புகளை நோவ நோவ மிக அழுத்தி நீட்டி இழுத்தல். ‘பால்கொளல்’என்னுங் குறிப்பினாலேயே அவ்வானுக்குக் கன்றிருப்பது பெறப்படுமாயினும் பாலருந்தக்கன்றொன்றிருக்கின்றதே என்பதையும் நோக்காமல் அது செய்வன் என்பதைக் குறிக்கக் ‘கற்றா’என்றார். கன்று ஆ என்பது வலித்துக் கற்றாவாயிற்று. “கற்றாவின் மனம்போல்” என்பதுதிருவாசகம். வருத்தி வரி வாங்கும் அரசனுக்கு வருத்திப் பால் கறக்கும் செயற்கையும் நல்லதாய்தோன்றும் என்று கூறினார். எத்துணைத் தீய செய்கையைச் செய்தற்கும் அவன் நெஞ்சம்ஒருப்படுமென்று அவன் கொடுமையை உணர்த்துதற்கும், பால்கொளல் இறை கொள்ளுதற்கு உவமையாதற்குமென்க. இறை-வரி; இதனை “அரசனுக்கு இறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று”* என்னும் பரிமேலழகருரையிற் காண்க. கொள்ளுமாரு கடைக்குறை. “குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கு மாநிதியங் காண்டும்” என்பதனால் குடிகொன்றிறை கொள்ளுங் கோமகற்கு அச்செல்வம் இல்லை என்பது குறிப்பெச்சமாகப் பெறுதும்; மாநிதியம், பெரும் பணமன்று; பெருமையுடையபணம். என்னை? மிகுதியைக் குறித்தற்கு ‘வெள்ளத்தின் மேலும் பல’ வென்று பின் வருதலாலும்வருத்தாது வாங்குவான் பணம் மிகுதியாதலோடு பெருமையுமுடைய தென்பதை இங்குக் குறித்திடல்இன்றியமையாத தாதலாலும் என்க. கொள்ளுமா கொள்வார் பணம் பெருமையுடையதாம். எனவே, அங்ஙனங்கொள்ளாதார் பணம் குறைந்து போனதோடு பெருமையும் இலதாம் என்று கொள்க. வெள்ளம் ஓர்எண்ணென்றுங் கூறுப. வெள்ளத்தின் மேலும் பல என்னும் மூன்று சொற்களையும் மேலும்மேலும் மிகும்என்பதற்குக் கொள்க. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது அசை. (க-து.) குடிகளை வருத்தாது வரி வாங்குதல் அரசன் கடன்.(29) ________________________________ * திருக்குறள், இல்வாழ்கை. 3-உரை. |