(பொ-ள்.) பணியப்படுவார் புறங்கடையராக-தம்மால் வணங்கி எதிர்கொள்ளத்தக்க பெரியார் தம்முடையதலைவாயிற்படியில் வந்து நின்றனராக, தணிவுஇல் களிப்பினால் தாழ்வார்க்கு -அடங்குதலில்லாதசெல்வக்களிப்பினால் அவரை எதிர்கொள்ளக் கூசுவார்க்கு, அணியது இளையாள் முயக்கு எனினும்-திருமகளின் சேர்க்கை அப்போது அவர்க்கு நெருக்கமாயிருக்கின்றதானாலும்; சேய்த்து அன்றேமூத்தாள் தொலையாத போகம்கொளல் - மூதேவியின் ஒழியாத சேர்க்கையை மேற்கொள்ளுதல்அவர்களுக்குத் தொலைவில் இல்லை. (வி-ம்.) ஆகவே,பெரியாரை மதியாது செல்வக்களிப்பினாற் செருக்குவார்பால் உள்ள திருமகள் நீங்கியொழியமூதேவி விரைவிலே வந்துசேருவள் என்க. அவர்கட்கு அச்செல்வம் அழிந்துபோம் என்பது கருத்து.அணியது சேய்த்து என்பவற்றைக் கால அளவுக்குக் கொள்க. (க-து.) செல்வத்தை விடப் பெரியாரையே பெருஞ்செல்வமாகப்பேண வேண்டும். (36)__________________________________ `* தொலையாத என்னும் இச்சொல் ஓர் ஏட்டுப்படியிற் கண்டது. +"புணர்முலைப்போகம்"என்பதும் பாடம். |