(பொ-ள்.) பகைமுகத்த - பகைப்புலத்துள்ள, மா-(தன் பகைவராகிய) விலங்குகளையெல்லாம், கொல் - கொல்லுந்திறனுடைய, வெள் வேலான் -ஒளிமிக்க வேலேந்திய அரசன், நகை முகத்த - (தன்) மலர்ந்த முகத்திற் காணும், பார்வையின்- பார்வையில், தீட்டும் - தோற்றுவிக்கும், நன்கு மதிப்பு - நன்மதிப்புக்கள், மாகம் -வானும், சிறுக - குறையும்படி, நிதிக்குவை குவித்து - (அவ்வளவு பெரிய) பொருட் குவியலைக்குவித்து, ஈகையின் - அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப்பார்க்கிலும், ஏக்கழுத்தம் - செம்மாப்பு,மிக்குடைய - பெரிதுடையவாகும். (வி-ம்.) "மாகஞ்சிறுக" என்றது நிதிக்குவையின் பெருக்கத்துக்கு, அவரவர் தகுதிக்கேற்ப அளவுசெய்து நோக்குதலால் பார்வையிற் றீட்டும் என்று கூறினார். ஏக்கமுத்தமுடமையாவது அரசன்கண்ணோட்டமிருப்பதால் இனி நமக்கு யாதுங் குறைவில்லை; எவர்க்கும் அச்சம் இல்லை என்று தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும்,அக்கிளர்ச்சியாலேற்படும் செம்மாப்பும்மிக்கு' மிக என்னுஞ் செயவெ னெச்சத்திரிபு. ஈகை: தொழிற்பெயர். முகத்த: குறிப்புப்பெயரெச்சம். அரசன்பால் குறையிரந்து நிற்கும் ஒருவனுக்கு அவ்வரசன் அளவற்ற பொருட் குவியலை அளிக்கிறான் என வைத்துக்கொள்வோம்.அவ்வாறு பொருட்குவியலைப் பெற்று அகன்றபின், அரசன் அவனைப்போல் தன்னிடம் வந்துகுறையிரந்த பல்லாயிரக்கணக்கான வறியரில் ஒருவனாய் எண்ணி அந்நேரமே அவனை மறந்துவிடுவான்.ஆனால் அங்ஙனமின்றி எப்பொழுதும் அரசனது கண்ணோட்டம் அவனுக்கிருப்பின் அவன் யாருக்கும்அஞ்சவேண்டியதில்லை. அவனை நாடிவருவோர் பலர் இருப்பார். அதனால் அவனுக்கு எப்போதும்மனமகிழ்ச்சியும் செல்வாக்கும் இருந்துவரும். (க,து,)அரசினடத்திலே அளவற்ற பெரும் பொருளைப் பரிசாகப் பெறுவதினும் வேனாலே நன்கு மதிக்கப்படும்பேறு பெறுதல் ஒருவர்க்கு மிக்க மேம்பாட்டைக் கொடுக்கும் (39) |