40. அடைக்கலங் காத்தல்

களைகாணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர்
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய
தூனுடம் பெள்று புகழுடம்பு ஒம்புதற்கே
தானுடம் பட்டார்கள் தாம்

(பொ-ள்.) ஊன்உடம்புஇறைச்சியாலாகிய இவ்வுடல், தளர் நடையது என்று - (பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றால்)நிலைதளருந் தன்மையுடையது என்று கருதி (அதனால்அதை வெறுத்து), புகழுடம்புஓம்புதற்கே-(நிலைதனராத) புகழ் உடம்பினை வளர்க்கவே, உடம்பட்டார்கள் -தீர்மானித்தவர்கள்,தம் களைகண் ஆக அடைந்தவர்க்கு - தம்மை ஆதாரமாக அடைந்தவர்க்கு, உற்றஉழியும் (சிறிது துன்பம்) வந்தவிடத்தும், மற்றும் ஓர் விளைவு உன்னி - வேறொரு பயனைக்கருதி, வெற்றுடம்பு தாங்கார் - பயனில்லாத (தமது) ஊன் உடம்பினைப் பாதுகாக்க நினையார்.

(வி-ம்.) அரசர்க்கரசன்சிபி, புறாவின் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்ததும், தேவர் துன்பம் நீங்கத் ததீசிமுனிவர்தம் முதுகெலும்பு ஈந்ததும், பாபர் தம்மகன் பிழைக்கவேண்டி அவனுக்கு வந்த காய்ச்சலை ஒருபெரியார் கூறியபடி தாம் ஏற்றுத் தம் மகனுயிர் காப்பாற்றியதும், புகழுடம்பு விரும்புவார் தம்ஊனுடம்பைப் பொருட்படுத்தார் என்பதற்குத் தக்க சான்றாகும். "ஏவரெனினும் இடருற்றனராகிஓவில் குனையொன் றுளரேல் அது முடித்தற்கு ஆவிவிடினும் அறனே" என்பது கந்தபுராணம். களை கண்- நீக்குமிடம்.ஊனுடம்பு: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்றொக்க வேற்றுமைத் தொகை நிலைத்தொடர்.புகழுடம்பு: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்புமுரியர் பிறர்க்கு" என்பது திருக்குறள்.

(க-து.) புகழைவிரும்புகின்றவர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும்தம்மையடைந்தோர்க்கு உற்ற துயரை ஒழிப்பர்.    (40)