65. அறத்தாற்றிற் பொருளீட்டல்

தத்தம் நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - எய்த்தும்
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடைய தாகும் பொருள்

(பொ-ள்.) தத்தம் நிலைக்கும் குடிமைக்கும்தப்பாமே - தத்தமக்குரிய நிலைமையிலும் குலவொழுக்கத்திலும் வழுவாது, ஒத்த கடப்பாட்டில் தாள்ஊன்றி-இயைந்த முறையில் முயற்சி செய்து, எய்த்தும் அறம் கடையில் செல்லார் - மறந்தும்பாவநெறியில் செல்லாமல், பிறன் பொருளும் வெஃகார் - பிறனுடைய பொருளையும் விரும்பாதவருடைய,புறங்கடையதாகும் பொருள்- தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து கைகூடும்.

(வி-ம்.) தகுதியை இழத்தலாகாதென்றற்கு 'நிலைமைக்குங்குடிமைக்குந்தப்பாமே' எனவும், உலகியலோடும்ஒத்து முயல்கவென்றற்கு 'ஒத்த கடப்பாட்டில்'எனவும், முயற்சியில் கருத்தூன்றுக வென்றற்கு 'ஊன்றி'எனவும்,பிறன்பொருள்விரும்பில்தன்பொருளுங்கேடுறுமாதலின்'பிறன்பொருளும்விரும்பில்தன்பொருளுங் கேடுறுமாதலின் 'பிறன் பொருளும் வெஃகார் எனவும் கூறினார். இவ்வாறுகுலவொழுக்கங் குன்றாமலும், பிறன் பொருள்மேல் ஆசை வையாமலும்,தம்முயற்சியால்பொருள்தேடுவார்க்கு அவர்அறநெறி கண்டு அகமகிழ்ச்சி கொள்ளும் அறக்கடவுள்,அன்னார் புறங்கடையில் எளிதிற்பொருள்குவிப்பார்என நன்னெறியினின்று முயற்சியால்பொருளீட்டும் பெருமை ஆசிரியர் புகழ்ந்தனர். செல்லார், வெஃகார்;வினையாலணையும் பெயர்கள்; இவற்றில்எதிர்மறை ஆகார இடைநிலை புணர்ந்து கெட்டது. நிலையாவது, தம்மிடத்தே நிறறலுடையனவாகிய பொருள், வலி, ஆண்மை துணை முதலாயின. தாம் தாம் என்பது வேற்றுமைப்பொருளில் தத்தம் என்றாயிற்று.

(க-து.) தீய வழிகளிலல்லாது தமது நிலைமைக்கும் குடிமைக்கும் பொருந்திய நல்வழியிற்பொருள் தேடுவார்க்குப் பொருள் எளிதிற்கூடும். (65)