68. இன்சொல்

ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஓ கொடி கொடிதம்மா - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா இவரென்செய் வார்

(பொ-ள்.) ஈகைஅரிது எனினும்- தாம்ஒருவர்க்குக் கொடுத்தல்முடியாதெனினும், இன்சொலினும்-இனியமொழிகளைக் கூறுதலினும், நல்கூர்தல்- வறுமையடைதல், ஓஓ கொடிது கொடிது - ஐயோமிகவுங்கொடுமை, தீநாகொன்று - பேசமுடியாதபடி நாவைச் சிதைத்து, வாய்ப்பூட்டு வினைக்கம்மியனால் - பாவமாகிய கம்மாளனால், இடப்படின் - வாய்ப்பூட்டும்போடப்பட்டால், இவர் - இவர்கள், ஆஆ - ஐயோ , என்செய்வார்-யாது செய்வார்கள்?

(வி-ம்) இதுமுதல் மூன்றுசெய்யுள்கள்வாக்கினாலான பயனை விளக்கும்.ஓஓ ஆஆ, அம்ம: இவை இரக்கப்பொருளன. தீவினை கம்மியனாக உருவகிக்கப்பட்டது.கம்-தொழில். கொடிது கொடிது : அடுக்கு மிகுதிமேலது. பாவம்வந்து வாயைப்பூட்டிவிட்டது: அதனால்அவர்வாய்திறந்து இனிய சொற்கூறுவதும்அரிதாயிற்று. எனப் புகழ்வதுபோல இகழ்ந்தனர்எனக்கொள்க.

(க-து.) ஒருவர்க்கு ஒன்று ஈயத்திறனில்லாது போயினும், இன்சொல்லேனுஞ் சொல்லாதொழியின் அது பெருந்தீவினையாய் முடியும்.   (68)