75. தீயன தீயனவே

தீய செயற்செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல - தீயன
நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல்

(பொ-ள்.) தீயசெயல்செய்வார்ஆக்கம்பெருகினும்- தீய காரியங்களைச்செய்வோரின்பொருள்ஒருகால்பெருகி வளர்ந்தாலும், தீயன - தீயகாரியங்களால் திரட்டியஅப்பொருள் எல்லாம், நா இன்புறநக்கிக்கொல்லும்கவயமா போல் - நாவினால்இன்பமுற நக்கிப்பின்னால்கொல்லுகின்ற காட்டுப்பசுவைப்போல். தீயனவே வேறல்ல - தீமைபயப்பனவேயன்றி வேறாகா. (ஏனெனில்) தீயன - தீயகாரியங்களால், நல்லன ஆகா - (என்றும்)நற்காரியங்களாக மாட்டா.

(வி-ம்.) காட்டுப்பசு தான்கொல்லவிரும்பும்ஓர்உயிரை நாவினால்இன்பந்தோன்றநக்கிக்கொண்டேயிருந்து, அவ்வின்பத்திலீடுபட்டு அவ்வுயிா தன்னிலையில்அசையாமல்நிற்கையில்அதுதிடீரெனப்பாய்ந்து அதன்உயிரை வாங்கும். அதுபோல்தீநெறியில் திரட்டிய பொருள்முதலில்இன்பந்தருவதாய்த்தோன்றினும், இறுதியில் தீமையைப்பயக்கும்என்றார். இது கருதியே "தீயனதீயனவே வேறல்ல" என்றும், " தீயனநல்லன வாகா" என்றுங் கூறினார்.கவயமா - காட்டுப்பசு.தீத்தான்பற்றிய பொருளை முற்றும்எரித்தல்போலத் தீய வழியாலீட்டப்பட்ட பொருளும் தற்சேர்ந்தாரை முற்றும் அழித்தலால்தீயன எனப்படும்.

" இலனென்று தீயவைசெய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து"

என்னுந்திருக்குறள் இங்கே கருதுதற்குரியது.

(க-து.) தீயகாரியங்களில் திரட்டிய பொருள் தீமையையேசெய்யும். (75)