(பொ-ள்.) தம்முன்னை ஊழ்வலி யுன்னி - முற்பிறப்பிற் செய்த தமது பழைய ஊழின் வலிமையைநினைந்து, பழி நாணி உள் உடைவார்- (வருகின்ற) பழிச் சொற்களுக்குவெட்கி மனம் வருந்துவோர், சில தீய செயினும்- (ஒரு காலத்தில் அறிவுமயங்கியேனும்பிற காரணங்களாலேனும்) சில தீயகாரியங்களைச் செய்தாராயினும்,(அவர்கள்) நன்மக்கள்- மேன்மக்கள்- செந்நா தழும்பு இருக்க -செவ்விய நாவினை (இடைவிடாமல் தம் நன்மையை எடுத்துரைத்தலால்)தழும்பேறிருக்கும்படி, நாள்வாயும் செந்நெறி செல்வாரின் -நாள்தோறும் நல்லொழுக்க வழிகளிலே செல்லும் மேலோரினும், கீழ் அல்லர்- கீழாகார். (வி-ம்.) தாம் அறியாமல் ஊழ்வினையால்மதிமயங்கித் தீய காரியங்கள் செய்ய நேர்ந்து அதனால் வரும் பழிக்கு நாணி மனம் வருந்துவோர், மேலும்மேலுந் தீய காரியங்களைச் செய்யாராதலின் அதனால் அவர் பெருமை குன்றுதலிலர். நாள்வாயும் : 'வாயும் ஏழாம் வேற்றுமைக்கண் வந்து நாடோறுமென்னும் பொருடந்து நின்றது. கீழ் : பண்பாகு பெயர்; கீழோரை உணர்த்திற்று. உன்: இடவாகு பெயர்; மனத்தைஉணர்த்திற்று. நல்லோர் இடைவிடாது புகழ என்பார், ‘நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க’ என்றார். “பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்கு, உறைபதி யென்னு முலகு" என்பது திருக்குறள். செந்நா - உண்மையாகிய செம்மையயுடைய நா. (க-து.) மேன்மக்கள் ஒரோவொருகால்ஊழ்வலியால் நல்லொழுக்கத்தினின்றுதவறினும், அவர்கள் உள்ளுடைந்து வருந்துதலின் நன்மக்களேயாவர். (76) |