(பொ-ள்.) கற்பு உடுத்து- கற்பாகிய ஆடையை உடுத்து, அன்பு முடித்து - அன்பாகிய மலர் சூடி, மெய்- உடம்பில், நாண்பூசி - நாணமாகிய கலவைச் சாந்து பூசி, நற்குணம்நற்செய்கை பூண்டாள் கு - நற்குணம், நற் செய்கைகளாகியஅணிகலன்களை அணிந்தமனையாளுக்கு,மக்கள்பேறு என்பதோர் செல்வமும்உண்டாயின்- புதல்வரைப் பெறுதலானஒப்பற்ற ஆக்கமும் உளதானால், கொண்டான் கு- (அவளை மனைவியாகக்) கொண்டவனுக்கு, செய்தவம்- (அவன்) செய்ய வேண்டியதவம், வேறு இல்- வேறு இல்லை. (வி-ம்.) கற்பு ; அன்பு, நாணம்,நற்குண, நற்செய்கையே ஆடை, மலர், கலவை,அணிகலன் எனக் கொள்ளப்பட்டன ; அதற்கேற்ப உடுத்து, முடித்து,பூசி, பூண்டாள்என வினைகள் தந்தார். எனவே, இஃது உருவகவணி. பேறு : பெறு என்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர், கற்பு - கணவனுக்குப் பொய்யாமல் ஒழுகும் நல்லொழுக்கம். அன்பு - சுற்றத்தார் முதலியோரிடங் கொள்ளும்பரிவு. நாணம் - செய்யத்தகாதவற்றில் உள்ளத்திற்கு உண்டாவதோர் ஒடுக்கம்.பூண்டாள் : வினையாலணையும் பெயர். (க-து.) கற்பு, அன்பு, நாணம்,நற்குண நற்செய்கை மக்கட்பேறு முதலியமேன்மைகளையுடைய மனையாளொடு வாழும் வாழ்க்கையே தவ வாழ்க்கையைஒக்கும். (81) |