(பொ-ள்) கேள்- (தன்) கணவன், ஏத்துஎழில் மிக்கான்- சிறந்த அழகுமிகுந்தவனும், இளையான் - இளமைப் பருவமுடையவனும், இளையான் - இளமைப் பருவமுடையவனும், இசைவல்லான்-இசைபாடுதலில் வன்மையுடையவனும், காந்தையர் கண்கவர் நோக்கத்தான்- பெண்களின் கண்களைக் கவரும் பார்வையுடையவனும், வாய்ந்த - பொருத்தமான, நயன் உடை இன்சொல்லான் - மேன்மையான இனிய சொற்களையுடையவனும், எனினும் - ஆயினும், மாதர்க்கு-(கற்பிலாத) மாதருக்கு, மனம் அயலார்மேல்ஆகும் - வேற்று மனிதர்மேல்மனஞ்செல்லும். (வி-ம்.) எண்பதாவது செய்யுளில்ஆசிரியர் காமங் கதுவப்பட்டார் தம் மனைவியர் எவ்வளவு அழகுடையவராயிருப்பினும் பிறர்மனைவியர்மேல் ஆவல் கொண்டலைவர் என்பதற்கிணங்க, இச்செய்யுளில் கற்பிலா மங்கையர் தங் கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும் வேற்றுமனிதர்மேல் விருப்பம் கொள்வர் என்றார். இவ்விரண்டானும்ஆசிரியர் கற்பிலா ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கூறினாரென்க. மாதர்: இழிவினால் ஒருமையில் வந்த பன்மை ; இசைக்குஎளிதில் மயங்குவர் மாதர் என்பது, "பாடினான் தேவகீதம் பண்ணினுக் காசான் பாடக், சூடக மகளிர்சேர்ந்து" என்னும் சிந்தாமணியினால் விளங்கும். இச் செய்யுளுடன் பின்வரும் இரண்டு செய்யுளையுஞ் சேர்த்து மூன்று செய்யுளில்ஆசிரியர் கற்பிலா மகளிர் தன்மை கூறுகின்றார். (க-து.) கற்பிலாமனைவியர் தங்கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும் வேற்றுமனிதர்மேல் விருப்பங் கொள்வர். (82) |