84. கற்பில்லா மகளிரின் பிறப்பு

முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடுநாணும் பேணார்- பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு

(பொ-ள்.) முறையும் - தமக்கும் பிறர்க்குமுள்ளஉறவு முறைமையும், குடிமையும் - தமதுகுடிப்பிறப்பின் தன்மையும், பான்மையும் - தமக்கும் பிறர்க்குமுள்ள தகுதியும், நோக்கார் - பாரார்; நிறையும் - (மனம் தீயவொழுக்கங்களில் செல்லாமல்) நிறுத்தும் தன்மையும், நெடுநாணும் - நீடிய நாணமும்’ பேணார் - பாதுகாவார்; பேதைமைக்கு - பேதைமையே கொண்ட பெண்களுக்கு, பிறிது ஒரு பெற்றியும்   உண்டோ - இக்குணங்களல்லாமல் வேறு ஒரு குணமும் உண்டோ?(இல்லை ;கற்பு இல்மகளிர்) பிறப்பு பெரும் பாவம் - (ஆதலால்) கற்பில்லாத பெண்களின் பிறப்புப் பெரிய பாவமாம். 

(வி-ம்.) நாணம் பெண்களுக்குரியகுணமாகையால் அது பெண்களோடு கூடவே பிறந்து கூடவேவளர்கின்றதென்பார், ஆதலின் நெடுநாண் எனப்பட்டது. நிறை-கற்பு  நெறி நிற்றல்  :  தொழிற்பெயர். நிறு:பகுதி : விகுதி, பேதைமை : பண்பாகு பெயர். பான்மை- ஒருவனுக்கே  யுரிமையாயிருத்தல். 

(க-து.) கற்பிலாமகளிர் பெரும்பாவமுடையராவர்.    (84)