(பொ-ள்.) வீடுஇல் புலம் பகையினார் - புலன்களுக்குப் பகைவராகியகெடுதலில்லாத துறவிகள்; பெண்மை வியவார்-பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெயரும் எடுத்து ஓதார் - பெண்ணென்னும் பெயரையும் எடுத்துரையார்.நெஞ்சு உறைப்ப கண்ணோடு நோக்கு உறார்- நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப்பார்க்கமாட்டார்கள்; பண்ணொடுபாடல் செவி மடார் - தம்மை வயப்படுத்தும்பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: பண்பு அல்ல-குணமற்றனவானபிறசெயல்களையும் , பாராட்டார்- பாராட்டமாட்டார்கள். (வி-ம்.) வீடு - முதனிலை திரிந்ததொழிற்பெயர். புலப்பகை: வேற்றுமைத்தொகை. இச் செய்யுள் முதல் ஆசிரியர்இந் நூல் முடிவுவரை. துறந்தோர் தன்மைகூறுகின்றார். (க-து.) ஐம்புலனும் வென்ற துறவிகள் சிற்றின்பத்திற்குக் காரணமான காரியங்களில் ஈடுபடாதிருப்பர். (85) |