(பொ-ள்.) சிற்றின்பம்சில் நீரது ஆயினும் - சிற்றின்பம் சிறுமையுடையதாயினும், அஃது உற்றார் - அவ்வின்பத்திற்காளானோர்,மற்று இன்பம் யாவையும் கை விடுப - மற்ற எல்லா இன்பங்களையும்கைவிடுவார்கள். பேரின்பம் மா கடல் - பேரின்பமென்னும் பெரிய கடலிலே முற்றும்ஆடுவார் தாம்-எப்போதும் முழுகுபவர்கள்; பார் இன்பப் பாழ் கும்பியில் வீழ்பவோ - உலகவின்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? (வீழார்) (வி-ம்.) கும்பி-சேறு, 'யானையுநரகமுஞ் சேறுங்கும்பி' பிங்கலம். சிற்றின்பம் - சிறுமை இன்பம்; சிலநீர என்பது சின்னீர என்றாயிற்று, "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே, மற்றின்பம் வேண்டு பவர்" என்னுந் திருக்குறள் கருத்துஇங்கு நினைவு கூரற்பாலது. (க-து.) பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார் ; சிற்றின்பம்விரும்பினோர் மற்றின்பமெல்லாங் கைவிடுவர். (88) |