பக்கம் எண் :

129

  கடும்பற்று
 
  கீழோர் தம்பழியைப் பிறர்மேல் சாற்றுவர்
274
கஞ்சனத்தில் தம்முகமே
  காணுவது போற்கயவர்
தஞ்செயிரைப் பிறர்செயிர்போல்
  தாமெண்ணித் தூறுவாரோர்
வஞ்சகனை நம்பியொரு
  மாசிலான் இன்னலொடும்
எஞ்சலுறா வண்ணமவன்
  இழிவுரைத்தன் முறையாமே
  கண்ணாடியில் தம் முகமே காண்பதுபோல் கீழோர் தங்களிடமுள்ள குறைகளையே பெரியோர்மேல் ஏற்றிப் பழிப்பர். வஞ்சகனை நம்பும் நல்லோன் அவனால் துன்பம் எய்துவதுடன் பழியும் பெறுவான்.
 
கஞ்சனம்-கண்ணாடி. கயவர்-கீழோர். செயிர்-குற்றம். இழிவு-பழி.
  5
  அதி. 23-கடும்பற்று
  பொன்னைப் புதைத்துப் புல்லன் மண்கொள்வான்
275
பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன்
தன்னிடந் தொட்டமண் தனையி ழுத்தலான்
உன்னுடை யதுநிதி உலகமே யிம்மண்
என்னுடை யதுவென இயம்ப லொக்குமே.
  வேண்டும் நற்செயலுக்குப் பொருள் கொடாது கடும்பற்றுச் செய்து, அப் பொன்னை மண்ணினுள் புதைக்கப்போகும் இவறன்மையுடையான் மண்ணைத் தோண்டுகின்றான். தோண்டும்பொழுது குழிவாயிலுள்ள மண்ணைத் தன்பக்கம் இழுக்கின்றான். அப்பொழுது உலகைப் பார்த்து ழுஉலகமே! பொன் உன்னுடையது; மண்ணே என்னுடையது,ழு என்று சொல்லுவதை யொக்கும்.
 

இவறன்மை-உலோபம்.

  1
 

நீ.-9