| கணிகையரியல்பு |
| பொதுமக ளிடஞ்செயல் பொன்றுவித்தால் புகழ்வம் |
490 | விடமுண்டான் கூற்றுதைத்தான் அலகைவென்றான் புரமெரித்தான் விடையோ னென்னக் கடலுலகிற் சைவரவன் புகழ்விரிப்பார் கணிகையர்கட் கடுவை யுண்டு குடமுலையாங் கூற்றுதைத்துத் தாய்க்கிழவி யெனும்பேயைக் கொன்றன் னார்வாழ் இடமென்னும் புரமெரித்தா னெனில்யாமும் அவன்புகழை யியம்பு வோமே. |
|
| செந்நெறியாளர்கள் தங்கள் முழுமுதல்வராம் ஆனேறு ஊரும் அம்மையப்பரை, `நஞ்சுண்டார்; காலனைக் காலாலுதைத்தார்; பேயை வென்றார்; திரிபுரமெரித்தார்ழு எனக் கடல் சூழுலகில் அவருடைய மெய்ப்புகழை எடுத்துரைப்பர். நாமும் அவரைப் புகழவேண்டுமானால் அவர் பொதுமகளிருடைய கண்ணாகிய நஞ்சையுண்டு, கொங்கைக் கூற்றை யுதைத்து, தாய்க்கிழவியாகிய பேயைக் கொன்று, அவர்கள் இருக்கும் இடமாகிய புரத்தை யெரித்து உலகுக்கு இன்பத்தை அருளவேண்டும்; அப்பொழுது நாமும் புகழ்வோம். |
| விடம்-நஞ்சு. அலகை-பேய். புரம்-முப்புரம். விடை-ஆனேறு. சைவர்-செந்நெறியாளர்; சிவனடியார். |
| 14 |
| என்றும் பொதுமகள்வீட் டிருப்பர் பலர்மறைவாய் |
491 | கொடியாளன் பற்றபின்னர் பலர்நம்பால் வந்துன்னைக் கூடிக் கொண்டே மிடியென்றும் வாழ்கவென்றா ரேனென்றே முயிர்க்கினியாள் வீட்டில் நீவந் தடிவைத்த போதெல்லாங் கூடையுறி பரண்கட்டி லடிய டுக்கு நெடியசிறை யிருந்தோமச் சிறையையுன்றன் வறுமைவந்து நீக்கிற் றென்றார். |
|
| கொடியாளாகிய பொதுமகள் நம்மிடம் அன்பற்றபின், நாம் வீடு அடங்கினம். அப்பொழுது பலர் நம்மிடம் வந்து ழுஉன்னை |