பக்கம் எண் :

35

 ஞானாசிரியன் பெருமை
 
 
வேட்டகத் தரியநூல்க ளுளவேனு மினிதாக்
காட்டருட் குரவனின்றி யெவர்காண்பர் பயனே.
 கண்ணில்லா விட்டால் ஒளியின் பயனின்று; திறவுகோல் இல்லாவிட்டால் வீட்டில் புகமுடியாது. அவைபோன்று, வீட்டில் விரும்பிய நூல் பல இருப்பினும் ஞானாசிரியன் காட்டினால் அல்லாமல் ஒருவராலும் நூலின் பயன் காணமுடியாது.
 

3

 ஆசானா லன்றி யார்க்கும் பிறப்ப றாது
57
ஞானசூ ரியனெனுங் குரவனின்றி நரர்தம்
ஈனவெம் பவவிரா வையகலா ரெவருமே
கானம்வாழ் மிருகமாவர் கதிவாயில் பொதியு
மானவர்க் குறையுளாய் நிரயம்வாய் விரியுமே.
 மக்கள் ஞானாசிரியனாகிய விளக்கின்றிப் பிறவியாகிய இருளைக் கடவார். பிறவியைக் கடவாதவர் காட்டுவிலங் காவர். அவர்க்குக் கடவுள்நிலை கிட்டாது. அவர்கள் நரகத் தழுந்துவர்.
  குரவன்-ஆசான். பவம்-பிறப்பு. நிரயம்-நரகம். மானவர்-மக்கள். கதி-கடவுள்நிலை.
 

4

 தெய்வநூல் ஓதுவோன் சிறந்தமெய் ஆசான்
58
மண்ணிறைக் கடியரா யுயிர்வளர்ப்பர் பலரும்
விண்ணிறைக் கடியரா யெவரும்வீடு பெறவே
புண்ணியத் திருமறைப் பொருளையோது புனிதர்
எண்ணிடற் கரியபெற்றி யையியம்ப லெளிதே.
 உலகத்தார் மண்ணரசர்க்கு அடிமையாய் வாழ்வர். மெய்யுணர்ந்தார் கடவுளுக்கு அடிமையாய்த் தூய மறைப்பொருளை எல்லாரும் வீடுபெறும் பொருட்டு ஓதுவர். அளவிட முடியாத அவர்கள் பெருந்தன்மையைச் சொல்லமுடியாது.
 விண்ணிறை-கடவுள். வீடு-கடவுளின்பம்.
 

5

 

ஆசான் அரும்புகழ் அளவிடற் கரிதே

59
ஐம்புலக் கதவடைத்து மனமாவை அறிவாங்
கம்பம்வீக் கியஞருஞ் சுகமெனக் கருதியே