பக்கம் எண் :

78

  நீதி நூல்
 
157
உருவமொன்றா லாண்பெண்ணை யமைத்தனன்முன்பரனென்
    றுயர்ந்தோர்சொல் வதுநிசமா முரியோனில் லென்னும்
இருவர்கள்தம் நயந்துயரம் ஏகமெனக் கருதி
    யிட்டமொடு பெட்டமரிற் கட்டமவர்க் குளதோ.
  ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப்பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவியில்லாமல் காய்க்கும். (விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இனம் பெருக்கக் கூடினாலும் பெரும்பாலும் தனித்தனியாகப் பிரிந்தே வாழ்கின்றன.) ஆனால், பிறப்பிலுயர்ந்த உயர்திணை ஆண் பெண் என்னும் இருவரின் குடும்பவாழ்க்கையின்றி மகப்பேறு உண்டாகுமா? இருவரும் வேறுபாடின்றி ஒருமை எண்ணத்துடன் நம்வீடு, நம்பணம், நம்சுற்றம், நம்பிள்ளைகள் எனப் பொதுவாகவே சொல்லுகின்றார்கள். அவ்வுரிமையாலும், ஆண்டவன் முன்னாளில் ஆண்பெண்ணை ஓருடம்பினின்றும் படைத்தான் என்று ஆன்றோர் கூறுவது உண்மையாம். தலைவன் தலைவியென்னும் இருவர்களும் இன்பதுன்பங்களை ஒருமையாகக் கருதி விருப்பமுடன் பொருந்தி வாழ்ந்தால், துன்பம் அவர்க்கு ஏதும் உண்டோ? (இல்லை யென்க.)
  தரு-மரம். சேர்க்கை-குடும்பவாழ்க்கை. மனை-வீடு. பொருள்-பணம். இகுளை-சுற்றம். சேய்-பிள்ளை. பரன்-ஆண்டவன். நயம்-இன்பம். துயரம்-துன்பம். ஏகம்-ஒருமை. இட்டம்-விருப்பம். பெட்டம்-பொருத்தம்.
 

48