பக்கம் எண் :

81

  பரத்தைமை
 
  குடும்ப வாழ்வில் ஆடவர் வலது கையும் மகளிர் இடது கையும் ஆவர். காதலன் செய்யும் தொழில் எலாம் காதலி செய்ய எண்ணுவது வலக்கையின் தொழிலாகிய உண்டல் முதலியவற்றை இடக்கை செய்ய எண்ணின் இகழப்படுவது போல் இகழ்ச்சிக் குரியதாம்.
  தலைவன்-காதலன். தாரம்-காதலி. ஆற்றுதல்-செய்தல்.
 

5

  பரத்தையர் பெருநஞ்சு பாம்பினுங் கொடிதே
163
உண்டவர் தமைக்கொலும் ஓத வெவ்விடம்
அண்டினோர் தமைக்கொலு மாளி கையினால்
தண்டினோர் தமைக்கொலுஞ் சற்பந் தையலார்
கண்டவர் நினைப்பவர் தமைக்கொல் காலமே.
  கடலில் எழுந்த நஞ்சு உட்கொண்டவரைக் கொல்லும். அரிமா நெருங்கினவரைக் கொல்லும். பாம்பு கையால் தொட்டவரைக் கொல்லும். தீய பெண்கள் தங்களைப் பார்ப்பவர்களையும் நினைப்பவர்களையும் பெருநஞ்சுபோல் கொல்லுவர்.
  ஓதம்-கடல். அண்டல்-நெருங்கல். ஆளி-அரிமா; சிங்கம். தண்டல்-தொடுதல். சற்பம்-பாம்பு. காலம்-சாவு. விடம்-நஞ்சு.
 

4

  சிற்றின்பால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம்
164
நிலையில்சிற் றின்பத்தி னேயத் தால்தினம்
அலைவுசெய் பவந்தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினைச் சொறிதலுந் தகிக்குந் தீயினை
எலியினுக் கஞ்சியில் லிடலும் ஏய்க்குமே.
  நிலையாத சிற்றின்பத்துக்காக நாள்தோறும் நிலைத்த துன்பம் தரக்கூடிய பாவத்தைச் செய்தல், தலையின் தினவு நீங்குவதற்காகத் தலையினைக் கொள்ளிக் கட்டையால் சொறிதலும், எலிக்கு நடுங்கிச் சாம்பராக்குந் தீயினை வீட்டில் கொளுத்துதலும் போன்றதாம்.
  அலைவு-துன்பம். தகித்தல்-சுடுதல்; சாம்பராக்குதல். இல்-வீடு. ஏய்க்கும்-ஒக்கும்.
 

7

  நீ.-6