| 27. | கற்புக் குலைத்தமையும், கருவோ அறுத்தமையும், பொற்புக் குலைத்தமையும், போதம் இழந்தமையும். |
| | |
| 28. | என்ன வினைவருமோ! இன்னம் எனக்கு என்றறியேன்! சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி! சோர்வறவே. |
| | |
| 29. | கங்குல்பகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி! பங்கம் அழித்தாண்டி! பார்த்தானைப் பார்த்திருந்தேன். |
| | |
| 30. | சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ? ஓதிஉணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி! |
| | |
| 31. | என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல், அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில்? |
| | |
| 32. | கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ? எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ? |
| | |
| 33. | சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ? பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி? |
| | |
| 34. | கண்டார்க்குப் பெண்ணலவோ? காணார்க்கும் காமமடி! உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ? |
| | |
| 35. | கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் கொள்ளுவரோ? விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ? |
| | |
| 36. | பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ? தொண்டாய தொண்டர்உளம் தோற்றி ஒடுங்குமதோ. |
| | |
| 37. | ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ? பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண். |
| | |
| 38. | வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்! நோக்க அரியவன் காண்; நுண்ணியரில் நுண்ணியன் காண்! |
| | |
| 39. | சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்! கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்! |