| 40. | சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன் காண்! ஏட்டில் எழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ? |
| | |
| 41. | சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்; அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி! |
| | |
| 42. | பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி! கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி! |
| | |
| 43. | மஞ்சனம் ஆட்டி மலர்பறித்துச் சாத்தாமல் நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி! |
| | |
| 44. | பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்; ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி! |
| | |
| 45. | மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி! பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்! |
| | |
| 46. | அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில் என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண்! |
| | |
| 47. | சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல் புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே. |
| | |
| 48. | பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி! ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி! |
| | |
| 49. | செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி! மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி! |
| | |
| 50. | கல்வியல்ல; கேள்வியல்ல; கைநாட்டும் காரணம்காண் எல்லையள வற்றதடி! எங்கும் நிறைந்ததடி! |
| | |
| 51. | வாசா மகோசரத்தை மருவிஇடம் கொண்டாண்டி; ஆசூசம் இல்லாண்டி! அறிவுக்கு அறிவாண்டி! |
| | |
| 52. | பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி! எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி! |
| | |
| 53. | தித்திக்க ஊறுமடி! சித்தம் உடையார்க்குப் பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி! |