23. சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல் 35 நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர் இலக்கியங்களில் குறிப்பிடப் பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது ஞான சித்தர் பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது. நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி என்ற கண்ணியில் உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த உடல் அழகானதா? அழியாததா? வலிமையானதா? இல்லையே. அப்படியிருக்க இதனை நித்தியமென்று கருதி என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறது? யாரை யாரையெல்லாம் மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன் சொல்வாரே, இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள் அழகின்றனவே என்று. அதுபோல மற்றவை அழிவில் அவரது அழிவும் உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர். நீரிற் குமிழியைப் போல் நில்லாமல் மறைந்து விடுகின்ற இந்த உடம்பினை ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள் தீர விசாரிக்கையில் அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா, நான் |