தாம் சித்தர்கள் வழிவந்தவர் என்பதையும், இவர் மிக மிகப் பிற்காலத்தவர் என்பதையும் தம் பாடலில் தெரிவிக்கின்றார். கவன குளிகை கொண்டு - அதனாலே ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன். என்றும், மேலும் தன்னையும்தான் உணர்ந்தேன் - எட்டுத் தலங்கலும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் பின்னுக் அக் கதவடைத்தேன் - மேலாம் பெருவழி ஊடுசென்று திருவடைந்தேன் என்கிறார். இனி, அவர் பாடிய பாடல்களைப் பார்ப்போம். நொண்டிச் சிந்து ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம் கோதிலாச் சுடரொளியில் திரிகோணக் குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு | 1 | | | திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர் கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே. | 2 | | | சுந்தரா னந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் நந்தீசர் சட்டைமுனிவர் தன்னை நான்தொழு தேனடி தாள்பணிந்தேன். | 3 | | | அஞ்சுபுலக் கதவறிந்து பிரம மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து | |
|