பக்கம் எண் :

122மலரும் உள்ளம்

ஜவஹர்லால் நேரு

மனித ருக்குள் மாணிக்கம்.
    மக்கள் போற்றும் தலைவராம்.
புனித மான விடுதலை
    பெறவு ழைத்த ஜவஹராம்.

பெருமை மிக்க குடியிலே
    பிறந்த பெரிய தலைவராம்.
அருமை யான தொண்டுகள்
    அதிகம் செய்த நேருவாம்.

சிங்கம் போன்ற வீரத்தால்
    திறமை மிக்க செய்கையால்,
தங்க மான குணத்தினால்
    தரணி போற்றும் தலைவராம்.

அருமை யான வாழ்விலே
    அதிகப் பாகம் சிறையிலே
இருந்தார். ஆனால், அன்றுநம்
    இந்தி யாவின் பிரதமர்!