பக்கம் எண் :

மலரும் உள்ளம்13

தீபாவளி

காலைக் கோழி கூவும் முன்னே,
கண்ணை விழித்துக் கொள்ளலாம்;
எண்ணெய் தேய்த்து முழுகலாம்.

பட்ட ணத்தில் வாங்கி வந்த
பட்டு ஆடை எடுக்கலாம்;
கட்டிப் பார்த்து மகிழலாம்.

பட்ச மான அப்பா விடம்,
பட்டாஸ் கட்டு வாங்கலாம்;
சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.

தருவாள் அம்மா, பட்ச ணங்கள்;
தட்டு நிறைய வாங்கலாம்;
பிட்டுப் பிட்டுப் போடலாம்.