பக்கம் எண் :

மலரும் உள்ளம்155

“கண்ணை மூடிக் கொள்ளுவாய்.
காட்டு கின்றேன், முட்களை”

என்று தந்தை கூறவே
இறுகக் கண்ணை மூடினன்.

சிறிது நேரம் சொன்றதும்,
திறந்து பார்க்கக் கூறினர்.

கண்ணைத் திறந்து பார்த்ததும்
கண்டான் இரண்டு முட்களை!

மகிழ்ச்சி பெற்ற கோபுவும் 
“மந்தி ரந்தான் என்னவோ!

எனக்குத் தெரியச் சொல்லுவீர்”
என்று கெஞ்சிக் கேட்டனன்.

கோபு தெரிந்து கொள்ளவே
கூற லானார், தந்தையும்.

“பார்த்தாய் கடிகா ரத்தினை,
பன்னி ரண்ட டிக்கையில்.

சிறிய தன்மேல் பெரியமுள்
சேர்ந்து ஒன்றாய் நின்றதால்,