பக்கம் எண் :

மலரும் உள்ளம்169

கண்ணீர் சொரியும் மான்அதனைக்
    கண்டார் ஜவஹர். கண்டதுமே,
புண்ணாய்ப் போனது அவர்மனமும்.
    கண்ணீர் விட்டார். அக்கணமே,

“துப்பாக் கியைநான் இனிமேலே
    தொடவே மாட்டேன். சத்தியமே”
இப்படி உடனே கூறினரே.
    இதுவரை சொல்லைக் காத்தனரே.