பக்கம் எண் :

மலரும் உள்ளம்19

கிளியே

பையன்-  கிளியே, கிளியே, உன்னுடன்
          கிளம்பி வரவா நானுமே ?

கிளி-     இறக்கை உனக்கு இல்லையே !
          எப்ப டித்தான் பறப்பதோ ?

பையன்-  இறக்கை நீதான் கொண்டுவா.
          இன்றே சேர்ந்து பறக்கலாம்.

கிளி-     பழங்கள் தாமே தின்னலாம்.
          பட்ச ணங்கள் இல்லையே!

பையன்-  பட்ச ணங்கள் வாங்கவே
          பணமும் கொண்டு வருவேனே.

கிளி-     பணத்தை எந்த இடத்திலே
          பாது காத்து வைப்பதோ ?

பையன்- பணத்தைச் சிறகி னுள்ளேயே
         பாது காத்து வைப்பேனே.

கிளி-    பறக்கும் போது, ஐயையோ,
         பணம் விழுந்து போகுமே!