பக்கம் எண் :

மலரும் உள்ளம்217

மனிதரைப்போல்

வில்லெ டுத்துப் பூனையார்
    விரைந்து ஒடும் எலிகளைக் 
கொல்ல ஆசை கொள்கிறார்;
    குறியும் பார்த்து எய்கிறார்!

துறட்டி ஒன்றை யானையார்
    துதிக்கை நுனியில் ஆவலாய்
இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;
    இளநீர் யாவும் பறிக்கிறார்!

உண்டி வில்லாமல் மந்தியார்,
    உயரே உள்ள பழங்களைக் 
கண்டு ஓங்கி அடிக்கிறார்;
    கனிகள் தம்மை உதிர்க்கிறார்!

குட்டி நாயார் உச்சியில் 
    ரொட்டிப் பெட்டி இருப்பதை,
எட்டி எடுத்துத் தின்னவே,
    ஏணி எறிச் செல்கிறார்!

“உங்க ளைப்போல் எதையுமே
    யுக்தி யோடு செய்திட,
எங்க ளுக்கும் தெரியுமே!”
    என்றோ காட்டு கின்றன!