கரடி கூட
உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று !
சிறுத்தை ஒன்று
கோபத் தோடு
சீறிப் பார்த்தது !
அங்கு எங்கள்
அருகி லேயே
சிங்கம் நின்றது !
கரடி, சிங்கம்
புலியைக் கண்டேன்;
கண்டும் பயமில்லை.
சூர னைப்போல்
நின்றி ருந்தேன்;
துளியும் பயமில்லை !
சென்ற அந்த
இடம் உனக்குத்
தெரிய வில்லையா ?
மிருகக் காட்சி
சாலை தானே;
வேறொன்றும் இல்லை !
|