பக்கம் எண் :

22மலரும் உள்ளம்


கரடி கூட
     உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று !

சிறுத்தை ஒன்று 
     கோபத் தோடு
சீறிப் பார்த்தது !

அங்கு எங்கள்
     அருகி லேயே
சிங்கம் நின்றது !

கரடி, சிங்கம்
     புலியைக் கண்டேன்;
கண்டும் பயமில்லை.

சூர னைப்போல்
     நின்றி ருந்தேன்;
துளியும் பயமில்லை !

சென்ற அந்த
     இடம் உனக்குத்
தெரிய வில்லையா ?

மிருகக் காட்சி
     சாலை தானே;
வேறொன்றும் இல்லை !